யாழில் மா.க.ஈழவேந்தனுக்கு மலர் அஞ்சலி
TamilsJaffnaCanadaSelvarajah Kajendren
7 hours ago
1956 இல் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்துத் தன் மத்திய வங்கி உயர் பணியைத் தூக்கியெறிந்த தன்மானத் தமிழன் மா.க.ஈழவேந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்றையதினம்(5) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அவரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மலர் அஞ்சலி
இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஈழவேந்தன் கடந்த 29ஆம் திகதி கனடாவில் காலமாானார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்