முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 645 சிங்களக்கைக்கூலிகள் 17பேர் ரஷ்யாவில் மரணம்

 

உக்ரைன்-ரஷ்ய போர்: சுமார் 17  சிறிலங்கா படையினர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்!

உக்ரைன்-ரஷ்ய போர்: சுமார் 17 சிறிலங்கா படையினர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்! | Sri Lankans Killed Fighting In Ukraine Russia War 
 By Eunice Ruth 4 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

உக்ரைன் (Ukraine) உடனான போரில் ரஷ்யாவுக்கு (Russia) ஆதரவாக போர் புரிந்த 17 இலங்கையர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆள்கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணைக்களுக்கமைய இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

ஓய்வுபெற்ற  சிறிலங்கா (Sri Lanka) படையினர் அதிக சம்பளத்துக்காக ரஷ்ய இராணுவத்தில் தொடர்ந்தும் இணைந்து வருகின்ற நிலையில், மேலும் சிலர் பணத்துக்காக ரஷ்ய கூலிப்படைகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றனர்.

ரஷ்ய இராணுவத்தில் இணையும் இலங்கையர்கள்

இந்த நிலையில், ரஷ்ய இராணுவத்தில் இணைந்த மேலும் இரண்டு இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன்-ரஷ்ய போர்: சுமார் 17 சிறிலங்கா படையினர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்! | Sri Lankans Killed Fighting In Ukraine Russia War

அதிகரித்துள்ள வெளிநாட்டு வருமானம்: வெளியான தகவல்!

அதிகரித்துள்ள வெளிநாட்டு வருமானம்: வெளியான தகவல்!

கடந்த மார்ச் மாதம் 29 ஆம் திகதிக்கு பின்னர் குறித்த இரண்டு இலங்கையர்களுடான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் தொடர்பான எந்தவொரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை எனவும் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன்படி, ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான அசங்க சந்தன (Asanka Chandana) எனும் நபர் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். 

காணாமல் போன இலங்கையர்கள் 

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போர் புரிந்த அசங்க சந்தன, கடந்த மார்ச் மாதம் 229 ஆம் திகதிக்கு பின்னர் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். 


இலங்கையில் குறைவடைந்து வரும் பிறப்பு வீதம்! எதிர்காலம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில் குறைவடைந்து வரும் பிறப்பு வீதம்! எதிர்காலம் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அத்துடன், ஓய்வுபெற்ற கமாண்டோ அதிகாரியான பிரதீப் சந்தன எனும் நபரும் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி ரஷ்யாவுக்கு சென்றிருந்த நிலையில், அவர் கடைசியான மார்ச் மாதம் 29 ஆம் திகதி தங்களை தொடர்பு கொண்டிருந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். 

இதேவேளை,  சிறிலங்கா இராணுவத்தினரை ரஷ்ய கூலிப்படைகளுக்கு விற்கும் மோசடியின் மூலம் பணம் வசூலிக்கும் கும்பல், ஒவ்வொரு இராணுவ வீரரிடம் இருந்தும் 25 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளமை விசாரணைகளின் மூலம்  தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?