முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 629 விடுதலைப்புலிகளை உதாரணம்காட்டும் வெளிநாட்டு விசமிகள்?

 

விடுதலைப்புலிகளைப்பொறுத்தவரையில் அவர்களின் தமிழ் இனத்திற்கே உலகத்தில் சொந்த நாடு இல்லாத அமைப்பு அது ஆனால் இவர்களிற்கு உலகத்தில் பல நாடுகள் உள்ளன இரண்டையும் ஒப்பிடுவது ஒரு முட்டாள்தனமான சிந்தனை ஆகும்?

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை பாடமாகக்கொண்டு ஹமாஸ் செயற்படவேண்டும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Ltte Is An Example Of Hamas



Sri Lanka Final WarLTTE LeaderIsrael-Hamas War
 2 hours ago
Sivaa Mayuri

Sivaa Mayuri

in உலகம்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group
Courtesy: Sivaa Mayuri
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை பாடமாகக்கொண்டு ஹமாஸ் செயற்படவேண்டும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஹமாஸ்(Hamas) அமைப்பு, தமிழீழ விடுதலைப்புலிகள்(LTTE) மற்றும்  இலங்கை அரசாங்கத்துக்கு இடையிலான யுத்தத்தை பாடமாகக்கொண்டு, பணயக்கைதிகளை விடுவித்து நேர்மையை காட்டும் வரையில் இஸ்ரேல் நிராயுதப்பாணிகள் மீதான தாக்குதல்களை நிறுத்தாது என்று சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் - இஸ்ரேல் யுத்தம் தொடர்கிறது. இதன்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர்.

இருபதுக்கு 20 உலகக்கிண்ண இலங்கை கிரிக்கெட் குழாமில் யாழ் வீரர் வியாஸ்காந்த்

இருபதுக்கு 20 உலகக்கிண்ண இலங்கை கிரிக்கெட் குழாமில் யாழ் வீரர் வியாஸ்காந்த்

இஸ்ரேல் நடவடிக்கை

எனினும் இஸ்ரேல் தமது நடவடிக்கைகளை இன்னும் நிறுத்தவில்லை.


முன்னதாக 2009ஆம் ஆண்டு இலங்கைப்படையினர் சர்வதேச ஆதரவுடன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தியநிலையில் இறுதியில் அதில் இறந்தவர்களில் 34 வீதமானோர் பொதுமக்களாவர்.

எனினும் இதன்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேசத்தை கண்டு  இலங்கை அரசாங்கம் பின்வாங்கவில்லை.

தற்போது ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையில் எகிப்த்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவது போன்று இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன

எனினும் அவை தோல்விக்கண்ட நிலையில் இடையில் தலையீடு செய்ய சென்ற இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில் 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் நோர்வேயின் ஏற்பாட்டில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அது முடிவுக்கு வந்தபோது, தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க  இலங்கை அரசு முடிவு செய்தது.

ஐரோப்பிய நாடொன்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஈழத்தமிழர்

ஐரோப்பிய நாடொன்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஈழத்தமிழர்

இராணுவ நடவடிக்கை

இதற்காக தமது தமது இராணுவத்தை இலங்கை மேம்படுத்தியது, விடுதலைப் புலிகளை அதன் பிரபலமான தளத்திலிருந்து தனிமைப்படுத்தியது. அத்துடன் போரினால் சோர்வடைந்த இலங்கையர்களை நம்ப வைத்தது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை பாடமாகக்கொண்டு ஹமாஸ் செயற்படவேண்டும்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Ltte Is An Example Of Hamas

பின்னர், விடுதலைப் புலிகளை வேட்டையாடுவது மற்றும் அவர்களின் தளங்களை ஒருமுகப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையின் மூலம் அழித்தது .

இதன்போது இந்திய மற்றும் அமெரிக்க உதவிகளும் கூட கிடைத்ததாக சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே ஹமாஸ் அமைப்பு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தவறுகளில் இருந்து பாடம் கற்று, அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதன் மூலம் தனது நேர்மையை வெளிப்படுத்தாத வரையில், இஸ்ரேல் நிராயுதபாணிகளை தாக்கும் கொடிய இலக்கிலிருந்து பின்வாங்காது.

இந்த வன்முறை நிரந்தரமான முடிவாகவும் இருக்க முடியாது” என்றுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?