முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b672

போராளிகளின் ஆழ்மன உனர்வை அறிய முடியாமல் இருந்த தமிழர்கள் நான் தலைவருக்காக போராடவில்லை போராளிகளிடம் அனுமதி வேண்டிக்கொண்டு வாங்கோ….!!! உண்மை சம்பபவம்….!!! கனடாவில் வசிக்கும் ஈழத்து பணக்கார குடும்பம் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் தொழில் செய்கின்ற குடும்பம்.அந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் மூன்றும் ஆண்மக்கள்.இரு பிள்ளைகள் தாய் தந்தையுடன் கனடாவில் வசிக்கின்றனர்.கடைக்குட்டி நாட்டுக்காக இயக்கத்தில் இணைந்து கடமையாற்றிக் கொண்டிருந்தவர். இந்நிலையில் இப்போராளியின் பெற்றோர் பலமுறை தன்மகனுக்கு விரும்பி எழுதினர் “நீ கனடாவுக்கு வா இங்கு வந்து இயக்க வேலைகளை செய்” என்று பலமுறை தங்களுடைய கடைசி மகனுக்கு கடிதம் மூலமாக இடைவிடாது எழுதி வலியுறுத்தினர்.ஆயினும் மகன் தாய் தந்தை சொல்வதை கேட்பதாக இல்லை.தமிழீழமே உயிர்மூச்சென்று களப்பணியாற்றுகின்றார். ஆயினும் அப்போராளியின் பெற்றோர் கடைசிமகன் மீதுள்ள அளவற்ற பாசத்தால் சமாதான காலத்தில் நேரடியாக தமிழீழத்திற்கே சென்று தலைவரை சந்தித்து எடுத்து கூறுகின்றனர் “அவன் இங்க நிப்பதைவிட கனடா வந்தால் இங்கிருப்பதைவிட விடுதலைக்காக அதிகப்படியான பணிகளை செய்யலாம்.நாங்கள் அவருக்கு மு

tamil eELAM NEWS B671

தினம் காலை உணவாக பேரிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டால் ஏற்படும் அசுர நன்மைகள் காலை உணவாக அனைவரும் பெரும்பாலும் இட்லி மற்றும் தோசை போன்றவற்றை தான் அதிகம் உட்கொள்வார்கள். பேரிச்சம் பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. மேலும், பேரிச்சம் பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி3, பி5, ஏ1, சி, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் போன்ற மூலப்பொருட்கள் ஏராளமாக உள்ளன. இது மனித உடலின் எலும்பு முறிவை குறைக்கிறது. எலும்புகளுக்கு உறுதியையும் தருகிறது. தினமும் பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு வர, எலும்புகள் வலுவிழந்து, சிதைவு போன்ற பிரச்சனைகளில் இருந்து காக்கிறது. பேரிச்சம் பழத்தில் பல்வேறு அமினோ அமிலங்களும், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்தும் உள்ளதால், தினமும் குடித்து வந்தால், செரிமான அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்தி, செரிமான பிரச்சனைகளைத் தடுக்கலாம். பேரிச்சம் பழம் உடலின் ஆற்றலை அதிகரிக்கிறது. ஏனெனில் இதில் குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் அதிகம் உள்ளது. மேலும், பேரிச்சம் பழத்தை தினமும் பாலுடன்

TAMIL Eelam news b670

முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் யோகராசா நிதர்சனா (12) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுமியின் ஒரு கை உடலில் இருக்கவில்லை என கூறப்படும் நிலையில், அதனை விலங்குகள் சேதப்படுத்தியிருக்கலாமென கருதப்படுகிறது. மூங்கிலாறு வடக்கு, 200 வீட்டுத் திட்டம் என்ற கிராமத்தில் கடந்த 15ஆம் திகதி காணாமல் போன சிறுமி, இன்று வீட்டிற்கு சற்று தொலைவில் வெற்றுக்காணிக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது. இதேவேளை, நேற்று அந்த பகுதியில் இராணுவத்துடன் இணைந்து தேடுதல் நடத்திய போது, சடலம் காணப்படவில்லையென்றும், இரவோடு இரவாகவே சிறுமியின் சடலம் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சடலத்தை மீட்ட பொலிசார் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், முல்லைத்தீவு பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பா

TAMIL Eelam news b 669

ஈழத்தின் அவல நிலை தொடரும் பாலியல் வெறியாட்டம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர் மனைவி சேர்ந்து செய்த கொடூர செயல் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவியை முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன், கள்ளக் காதலனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் மாங்குளம் பொலிஸார், சந்தேக நபரின் மனைவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மனைவி மற்றும் மற்றுமொரு சந்தேக நபரான கள்ளக் காதலனை கைது செய்து தற்போது ஆதாரங்களை மீட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய முன்னாள் போராளியான நடராசா தனராஜ் என்பவருக்கும் 31 வயதான கீதாஞ்சலி என்பவருக்கும் திருமணமாகி 8 வருடங்கள் ஆகிறது. அவள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதிலிருந்து திருமணமாகிவிட்டாள். பெற்றோர் இல்லாத நிலையில், மூத்த சகோதரிக்கு திருமணமாகி, மற்றொரு தங்கை அவரது பராமரிப்பில் உள்ளார். இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வருவதால் குழந்தைகள் இல்லை. இதேவேளை, 36 வயதான இராசநாயகம் ஜெயபால

TAMIL Eelam news b668

ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்துவதற்கான புதிய திட்டம்! ஆஸ்திரேலியாவில் அகதிகளை குடியமர்த்தும்வகையில், பல்சமூகங்களை உள்ளடக்கிய Community Sponsorship செயற்றிட்டமொன்றை, பரீட்சார்த்த அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளது. CRISP என அழைக்கப்படும் Community Refugee Integration and Settlement Pilot என்ற இத்திட்டம் குறித்த அறிவிப்பை குடிவரவுத்துறை அமைச்சர் Alex Hawke நேற்று வெளியிட்டார். கனடாவில் நடைமுறையிலிருப்பதைப் போன்ற இச்செயற்றிட்டத்தை, ஆஸ்திரேலியாவிலும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் கடந்த பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டுவந்த பின்னணியில், ஆஸ்திரேலிய அரசு இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. Refugee Council of Australia உட்பட பல அமைப்புக்களின் பங்களிப்பைக் கொண்ட CRISP திட்டத்தில், ஆஸ்திரேலிய அரசும் இணைந்துகொண்டு தனது பங்களிப்பை வழங்கவுள்ளதாக அமைச்சர் Alex Hawke தெரிவித்தார். பரீட்சார்த்த அடிப்படையில், அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இத்திட்டத்தின் இறுதி வடிவம் விரைவில் வெளியாகும் என எதிர்பா

TAMIL Eelam news b667

யாழில் அதிகரிக்கும் பாலியல் வெறி பெண்களே அவதானம். யாழில் 30 வயது யுவதிக்கு கலியாணம் கட்டச் சொல்லி தொடர்ச்சியாக காதல் அம்பு விட்ட 70 வயது மன்மதனுக்கு சிறை!! நடந்தது என்ன? யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 30 வயதான இளம்பெண்ணிற்கு தொல்லை கொடுத்து வந்த 70 வயதான முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. கரணவாய் குருக்கள் பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணை, திருமணம் செய்யுமாறு தொல்லை கொடுத்த, கரவெட்டி மத்தொணி பகுதியைச் சேர்ந்த 70 வயதான முதியவரே, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் அந்த இளம்பெண் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது காதல் வசப்பட்ட 70 வயதான முதியவர், அவரை நிழல் போல பின்தொடர்ந்து வந்துள்ளார். பாடசாலை கால காதல் இளவரசர்களே மிரளும் அளவிற்கு காதல் வெறியுடன், அந்த தாத்தா, ரோமியோவாக மாறியிருந்தார். ஓய்வூதியரான அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். தன்னை நம்பி வருமாறும், அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்றும் அவர் நச்சரித்து வந்துள்ளார். இந்த ‘கொடூர

TAMIL Eelam news b666

மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் தடை- வடகொரியா அதிரடி உத்தரவு மக்கள் சிரிப்பதற்கும், அழுவதற்கும் 11 நாட்கள் தடை விதித்து வடகொரியா அரசு உத்தரவிட்டுள்ளது. வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜாங்-இல் மறைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து அந்நாட்டில் 11 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங்- உன் முடிவு செய்துள்ளார். இதனால் 11 நாட்களுக்கு அந்நாட்டு மக்கள் யாரும் சிரிக்கவும், மது அருந்தவும், கடைகளில் மளிகைப் பொருட்கள் வாங்கவும் கூடாது என அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் எந்தவித கேளிக்கை, கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது. வீடுகளில் யாராவது இறந்தாலும் கூட சத்தம்போட்டு அழக்கூடாது. இந்த உத்தரவை மீறுபவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு உடனே கைது செய்யப்படுவர் என தெரிவித்துள்ளது.