முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b672

போராளிகளின் ஆழ்மன உனர்வை அறிய முடியாமல் இருந்த தமிழர்கள்
நான் தலைவருக்காக போராடவில்லை போராளிகளிடம் அனுமதி வேண்டிக்கொண்டு வாங்கோ….!!! உண்மை சம்பபவம்….!!! கனடாவில் வசிக்கும் ஈழத்து பணக்கார குடும்பம் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் தொழில் செய்கின்ற குடும்பம்.அந்த தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் மூன்றும் ஆண்மக்கள்.இரு பிள்ளைகள் தாய் தந்தையுடன் கனடாவில் வசிக்கின்றனர்.கடைக்குட்டி நாட்டுக்காக இயக்கத்தில் இணைந்து கடமையாற்றிக் கொண்டிருந்தவர். இந்நிலையில் இப்போராளியின் பெற்றோர் பலமுறை தன்மகனுக்கு விரும்பி எழுதினர் “நீ கனடாவுக்கு வா இங்கு வந்து இயக்க வேலைகளை செய்” என்று பலமுறை தங்களுடைய கடைசி மகனுக்கு கடிதம் மூலமாக இடைவிடாது எழுதி வலியுறுத்தினர்.ஆயினும் மகன் தாய் தந்தை சொல்வதை கேட்பதாக இல்லை.தமிழீழமே உயிர்மூச்சென்று களப்பணியாற்றுகின்றார். ஆயினும் அப்போராளியின் பெற்றோர் கடைசிமகன் மீதுள்ள அளவற்ற பாசத்தால் சமாதான காலத்தில் நேரடியாக தமிழீழத்திற்கே சென்று தலைவரை சந்தித்து எடுத்து கூறுகின்றனர் “அவன் இங்க நிப்பதைவிட கனடா வந்தால் இங்கிருப்பதைவிட விடுதலைக்காக அதிகப்படியான பணிகளை செய்யலாம்.நாங்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவோம்” என்று தலைவரிடம் சொல்லுகின்றனர்.இப்பெற்றோர் தவிப்பை உணர்ந்த அண்ணண் அப்போராளி கனடா செல்வதற்கான தனது அனுமதியை எழுத்து மூலமாக எழுதி அப்பெற்றோரிடம் கொடுக்கின்றார்.உள்ளப் பூரிப்புடன் கண்ணீர் மல்க தலைவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அனுமதி கடிதத்துடன் தங்கள் ஆசைமகனை காண விரைகின்றனர்.தலைவரே சொல்லிட்டார் மகன் தட்டமாட்டான் எப்படியும் நம்மோடு கனடா வந்திடுவார் என்ற நம்பிக்கையோடு இருவரும் செல்கின்றனர். மகனை சந்தித்து “தலைவரே சொல்லிட்டார் எப்ப புறப்படலாம் தம்பி” என்று கேட்க ஒரு நிமிடம் அமைதியாக இருந்த மகன் “குறையா நினைக்காதீங்க உயிரோட இருக்கிற தலைவரிட்ட அனுமதி வாங்கிட்டியள் தமிழீழ கனவை சுமந்து களமாடி வீரச்சாவை தழுகிகொண்ட ஆயிரமாயிரம் போராளிகளிடம் எப்போ அனுமதி வாங்க போறியள்”என்று கேட்க இதைகேட்ட அப்போராளியின் பெற்றோர் திகைத்துவிட்டனர் அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.அப்போராளி மேலும் “நான் போராடுறது தலைவருக்காக அல்ல அவரது தலைமையில் தமிழீழத்திற்காகவும் அந்த இலட்சியதிற்காக உயிர்கொடை கொடுத்த போராளிகளின் கனவு தோற்றுவிடக்கூடாது என்பதற்காகவும்தான் களத்தில் நிக்கின்றேன்.முதலில் அந்த ஆயிரமாயிரம் போராளிகளின் ஆத்மாவிடம் அனுமதி வேண்டிக்கொண்டு வாங்கோ பிறகு நான் உங்களோடு வருகின்றேன்” என்று கூறிய தன் செல்ல மகனை வாரி அணைத்து முத்தம் கொடுத்த அப்பெற்றோர்.பெருமையுடன் கண்ணீர் மல்க நாங்கள் போகின்றோம் என்றுகூறி சிறிதுதூரம் நடந்துவிட்டு அந்ததாய் “இனி காண கிடைப்பானோ இல்லையோ” என்று கண்ணீருடன் மீண்டுமொருமுறை கட்டியணைத்து முத்தமிட்டு அழுதுகொண்டே கனடா திரும்பி சென்றனர். ஒன்றா இரண்டா எத்தனை ஆயிரம் தியாகங்களால் இந்த விடுதலைபோரை வளர்த்தோம் அவையனைத்தும் வீணாகிடகூடாது.செந்நீரில் வேர்பிடித்த ஈழமரம் மீண்டும் துளிர்க்கும்.தியாகங்கள் உள்ளிருந்து உயிர்நீர் ஊற்றும்.விடுதலையின் பாடலை ஒருநாள் எம்மக்களின் நாவுகள் முழங்கும். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் -பிரபாசெழியன். Related புலியின் காட்டுக்குள் சிங்கங்களும் நரிகளும் வாழ முடியாது காலம் பதில் சொல்லும் புலியின் காட்டுக்குள் சிங்கங்களும் நரிகளும் வாழ முடியாது காலம் பதில் சொல்லும் 12/07/2017

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?