முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b667

யாழில் அதிகரிக்கும் பாலியல் வெறி பெண்களே அவதானம்.
யாழில் 30 வயது யுவதிக்கு கலியாணம் கட்டச் சொல்லி தொடர்ச்சியாக காதல் அம்பு விட்ட 70 வயது மன்மதனுக்கு சிறை!! நடந்தது என்ன? யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 30 வயதான இளம்பெண்ணிற்கு தொல்லை கொடுத்து வந்த 70 வயதான முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. கரணவாய் குருக்கள் பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணை, திருமணம் செய்யுமாறு தொல்லை கொடுத்த, கரவெட்டி மத்தொணி பகுதியைச் சேர்ந்த 70 வயதான முதியவரே, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பகுதியில் உள்ள அரச நிறுவனம் ஒன்றில் அந்த இளம்பெண் பணிபுரிந்து வருகிறார். அவர் மீது காதல் வசப்பட்ட 70 வயதான முதியவர், அவரை நிழல் போல பின்தொடர்ந்து வந்துள்ளார். பாடசாலை கால காதல் இளவரசர்களே மிரளும் அளவிற்கு காதல் வெறியுடன், அந்த தாத்தா, ரோமியோவாக மாறியிருந்தார். ஓய்வூதியரான அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். தன்னை நம்பி வருமாறும், அனைத்து வசதிகளையும் செய்து தருவேன் என்றும் அவர் நச்சரித்து வந்துள்ளார். இந்த ‘கொடூர சம்பவத்தால்’ பாதிக்கப்பட்ட பெண், நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு முறை முறைப்பாடு செய்துள்ளார். பொலிசார் தாத்தாவை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.எனினும், அந்த எச்சரிக்கைகளால் காதல் தாத்தாவின் வெறி அடங்கவில்லை. தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்பெண் நெல்லியடி நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டிருந்த பொழுது, அங்கும் வந்து தொல்லை கொடுத்துள்ளார். இதனை அடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?