யாழில் தொடர்ந்து அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவம் ; மக்களுக்கு எச்சரிக்கை
![யாழில் தொடர்ந்து அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவம் ; மக்களுக்கு எச்சரிக்கை | Continued Increase In Jaffna Warning To People யாழில் தொடர்ந்து அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவம் ; மக்களுக்கு எச்சரிக்கை | Continued Increase In Jaffna Warning To People](https://cdn.ibcstack.com/article/13c03e72-2ca0-42de-986d-59ecf823b36b/24-663286bdc02fc.webp)
JaffnaSri Lankan PeoplesSri Lanka Police InvestigationCrime
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
யாழ் இருபாலை டச்சு வீதியில் தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் குறித்த வயோதிப பெண்ணை தாக்கி கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை (2024.05.01) இடம்பெற்றுள்ளது.
சீற்றால் கூரையிடப்பட்டிந்த வீட்டில் கூரையில் ஏறி சீற்றை உடைத்தே கொள்ளையர்கள் கீழே இறங்கி வயோதிப பெண்ணை தாக்கி கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இது தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
தனிமையில் இருக்கும் வயதானவர்களையும் பெண்களையும் கொள்ளையர்கள் தற்போது குறி வைத்து வருகின்றார்கள்.
குறித்த வீட்டில் வயோதிப பெண் தனிமையில் வசித்து வந்துள்ளதாகவும் அவரின் இரு ஆண் பிள்ளைகளில் ஒருவர் வெளிநாட்டிலும் இன்னொருவர் கோண்டாவில் பகுதியிலும் வசித்து வந்துள்ளார்கள்.
மூதாட்டி தனிமையில் இருக்க விரும்பியதாலேயே இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
வயதானவர்கள் தமது பாதுகாப்புக்காக பிள்ளைகளுடனோ அல்லது வேறு பாதுகாவலர்களுடனோ தங்குவது மிகவும் பாதுகாப்பானது என பொலிஸார் கூறியுள்ளார்.
கருத்துகள்