முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b132

 யாழ்ப்பாணத்தில் சிங்கள புலநாய்கள்  அட்டகாசம்! விரக்தியில் வெட்டப்பட்ட தாய், தந்தையர் யாழ். இணுவில் காரைக்கால் பகுதியில் (வாள்வெட்டு) வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மகனைத் தேடி வந்த கும்பல் அவர் வீட்டில் இல்லாத நிலையில் தந்தை மற்றும் தாயைத் தாக்கிவிட்டு   தப்பித்துள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது. சம்பவத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயக்குமாரி ஆகிய இருவரும் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

TAMIL Eelam news b131

 கிழக்கு பல்கலைக்கழகம் படைத்த மகத்தான சாதனை! இணைய வழியாக இன்று (20) இடம்பெற்ற மருத்துவ பீடங்களுக்கான அகில இலங்கை வினாவிடை போட்டியில் கிழக்கு பல்கலைக்கழகம் இறுதி சுற்றில் கொழும்பு மருத்துவ பீடத்தை எதிர் கொண்டு 10க்கு 0 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றிவாகை சூடியது , தகுதிகாண் சுற்றில் இரு பீடங்களும் சம புள்ளிகளை பெற்றிருந்ததும் குறிப்பிடதக்கது. இப்போட்டியானது முதற்தடவையாக இலங்கை நரம்பியல் சங்கத்தால் நடாத்தப்பட்டதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. இது zoom வழி போட்டியாக இடம்பெற்றது. இப்போட்டிக்கு மாணவர்களை Dr.அஜினி அரசலிங்கம், Dr.மயூரன் , Dr.றோஷினி ஆகியோர் தயார்படுத்தியதுடன் எமது பீடமும் பீடாதிபதியும் நிர்வாக ரீதியாக சகல ஆதரவையும் வழங்கி இருந்தது. இப்போட்டியில் சி.லலின்ஷன் ஆர்.அபினயா பாத்திமா லூதா ஏ.எம்.அகீல் டி.தனுஷ்காந்த் பி.தயானி ஆகியோர் பங்குபற்றி இப் பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்த்திருந்தனர். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

TAMIL Eelam news b130

 பாலியல் நடத்தைகளை ஊக்கப்படுத்தும் சிங்கள அரசு கண்டும் காணமலும் பார்த்துக் கொண்டுயிருக்கும்  பொலிஸ் அதிகாரிகள் 13 வயது தமிழ் சிறுமி சீரழிக்கப்பட்ட 10 இடங்கள்: வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள் நாவலப்பிட்டியில் 13 வயதான தமிழ்ச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வரும் தடயவியல் பொலிசார், சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 10 இடங்களை அடையாளம் காண்டுள்ளனர். சிறுமி 6 முதல் 7 ஆண்டுகளாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நாவலப்பிட்டி, ஹரங்கல இலுக்தென்ன பகுதியில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளான அதிர்ச்சி சம்பவம் அண்மையில் வெளியானது. 42 வயதான திருமணமான ஆசாமியொருவர் சிறுமியை அழைத்துச் சென்று, கற்குகை ஒன்றுக்குள் 4 நாட்களாக தடுத்து வைத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டான். இதன்போது, வேறு பல நபர்களாலும் சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத

TAMIL Eelam news b129

 ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய முடியாது - வெளியாகியுள்ள தகவல் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இது தொடர்பில் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குறிப்பொன்றை தயார் செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் டெல்லிக்கு விஜயம் செய்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இது பற்றி ஒரு குறிப்பு தயார் செய்து கொடுத்துள்ளார். அதில், முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பது சரியல்ல. இதில் சிலருக்கு மரண தண்டனை கிடைத்தாலும் பின் அதை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துவிட்டது. எனவே இந்த கொடூரமான கொலைக்கு காரணமானவர்களை விடுதலை செய்ய முடியாது. பரோலில் வேண்டுமானால் சில காலம் அவர்கள் வெளியே இருக்கலாம் எ

TAMIL Eelam news b128

 ஆபாச பட விவகாரம்.. நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது மிஸ்டர் ரோமியோ, குஷி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவர் ராஜ் குந்த்ரா ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்தவர்.  இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் (Shilpa Shetty) கணவர் ராஜ் குந்த்ரா (Raj Kundra) ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாசப் படங்களைத் (Pornographic films) தயாரித்த ராஜ் குந்த்ரா, அவற்றை மொபைல் செயலி மூலம் விநியோகம் செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர்.   முன்னதாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த விஷயத்தில் ராஜ் குந்த்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

TAMIL Eelam news b127

 உயிரிழந்த மலையக சிறுமி தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நான்கு பேரின் தொலைப்பேசி உரையாடல் பதிவு அறிக்கையை பொரளை பொலிஸில் உடனடியாக ஒப்படைக்குமாறு சேவை வழங்குனர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ரிஷாட் பதியுதினின் வீட்டில் உயிரிழந்த 16 வயது சிறுமியை அழைத்து வந்த இடைத்தரகரின் வங்கிக் கணக்கு தகவல்களையும் பொரளை பொலிஸிற்கு பெற்றுக் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டயகம பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ரிஷாட் பதியுதீன் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சிறுமியின் வயது 15 வருடங்களும் 11 மாதங்களும் ஆகும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் மூன்றாம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

TAMIL Eelam news b126

 இன அழிப்பு வியுகம் மாற்றப்பட்டுள்ளது முதல் துவக்கு இப்பொழுது வாள் இன அழிப்பு ஒரே  சமநிலையில் உள்ளது துரோகம் செய்த இந்தியாவிடம் செல்லுங்கள்! வெல்லுங்கள்!   இந்தியாவிடம் செல்லுங்கள், சொல்லுங்கள், வெல்லுங்கள்! அமெரிக்கா ஜனதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முறை கூறினார், “நீங்கள், எல்லா நேரங்களில் சிலரையும், சில நேரங்களில் எல்லாரையும் மடையர் ஆக்க முடியும். ஆனால் எல்லா நேரங்களில் எல்லரையும் மடையர் ஆக்க முடியாது” என்று. அதே போல் நாமும், “எல்லா நேரங்களில் சிலரையும், சில நேரங்களில் எல்லாரையும் திருப்திப்படுத்த முடியும். ஆனால் எல்லா நேரங்களில் எல்லரையும் திருப்திப்படுத்துவது இயலாத காரியம்” எனஅரசியல் ஆய்வாளர் ச.வி.கிருபாகரன் தனது கட்டுரையில்  தெரிவித்துள்ளார். குறித்த கட்டுரையில் மேலும், யதார்தம், உண்மை, நடைமுறை சாத்தியங்கள் போன்றவற்றை அடிப்படையாக கொண்ட ஒரு ஆய்வையும் ஆலோசனையும் இங்கு முன்வைக்க விரும்புகிறேன். இலங்கை தீவில் வாழும் தமிழ் மக்களின் இன்றைய நிலை என்ன? சில வருடங்களுக்கு முன்னர் - வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் தாயாகம்; இலங்கை தீவில் சிங்களம், தமிழ் என இரு தேசிய இனங்கள் இருப்பதாகவும் கூறி வந்த