மே 18 தமிழர் இனப்படுகொலை பிரேரணை! கனடாவிடம் முறையாக ஆட்சேபித்த இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை தனது கடுமையான எதிர்ப்பையும் ஆழ்ந்த கவலையையும் பதிவு செய்துள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட ,இலங்கைக்கான கனடாவின் பதில் உயர் ஸ்தானிகர் அமண்டா ஸ்ட்ரோஹானிடம், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், தமது ஆட்சேபனையை வெளியிட்டார். நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பொய்யான உள்ளடக்கத்தை அவர் திட்டவட்டமாக நிராகரித்ததுடன், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகக் கண்டறியவில்லை என்ற கனடாவின் நிலைப்பாட்டுடன் பொருள் அடிப்படையில், பிரேரணை முரண்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். இந்தநிலையில் குறிப்பிட்ட சட்ட அர்த்தங்களைக் கொண்ட இத்தகைய தொழில்நுட்ப சொற்கள் எச்சரிக்கையுடனும் பொறுப்புடனும் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டினார். எனவே இந்த பிரேரணையில் உள்ள தவறுகளை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனேடிய அரசாங்கத்தை வெளிவிவகார அமைச்சர் கேட்டுக்கொண்டார். மே 18 தமிழர் இனப்ப
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********