முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 513 வடகொரியாவில் இருந்து அணுகுண்டுகள் 72 மணி நேரத்தில் ...


பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை: பதுங்கித் தாக்கும் உத்தியைக் கையாள்கிறதா ஈரான்!

பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை: பதுங்கித் தாக்கும் உத்தியைக் கையாள்கிறதா ஈரான்! | Israel Missile Attack In Iran Us Staff Ban Travel
United States of AmericaIsraelIranIran-Israel Cold War
 4 minutes ago
Kathirpriya

Kathirpriya

in உலகம்
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

ஈரானின் இஸ்பஹான் மாகாணத்தில் உள்ள இஸ்பஹான் நகரின் வடகிழக்கே ஈரானிய இராணுவ விமான தளத்திற்கு அருகே மூன்று சிறிய அறியப்படாத பறக்கும் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தவிரவும் இந்த இராணுவ விமான தளத்திலுள்ள சில பொருட்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் ஈரானிய தளபதி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்தத் தாக்குதல் ஈரானியர்களைத் தூண்டிவிடுமா இல்லையா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, "ஈரானின் பதிலை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

சத்தமின்றி பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்...அதிகரிக்கும் போர்ப்பதற்றம்!

சத்தமின்றி பதில் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்...அதிகரிக்கும் போர்ப்பதற்றம்!

பயணத் தடை

இந்தநிலையில், இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஊழியர்கள் நடமாடுவதை கட்டுப்படுத்துமாறு கூறியுள்ளது, ஈரானுக்குள் இஸ்ரேல் நடத்திய பழிவாங்கும் தாக்குதலை தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


அதன்பொருட்டு, அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு டெல் அவிவ் பகுதிக்கு வெளியே தனிப்பட்ட பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, அதே போல் ஜெருசலேம் மற்றும் பீர்ஷேவா பகுதிகளும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரான் அதிபரின் இலங்கை விஜயம்: பலப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு

ஈரான் அதிபரின் இலங்கை விஜயம்: பலப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு

ஊடுருவலை நோக்கி

இஸ்ரேலில் நிலவரம் இவாறிருக்கையில், உடனடியாக பதிலடி கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார், இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லாததால் ஈரான் சற்று நிதானம் பேணி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை: பதுங்கித் தாக்கும் உத்தியைக் கையாள்கிறதா ஈரான்! | Israel Missile Attack In Iran Us Staff Ban Travel

இந்த சம்பவத்தில் வெளிநாட்டு செயற்பாடுகள் இருப்பதாக எந்த ஆதாரமும் உறுதிப்படுத்தப்படவில்லை, அதே சமயம் நாங்கள் எந்த வெளிப்புற தாக்குதலையும் பெறவில்லை. மேலும் இந்த சம்பவம் தாக்குதலை விட ஊடுருவலை நோக்கியே சாய்ந்துள்ளதாக தோன்றுகிறது,” என்று பெயர் தெரியாத நிலையிலான ஒரு கருத்தை அந்த அதிகாரி முன்வைத்திருந்தார்.

அதேசமயம், இந்தத் தாக்குதலுக்கு, இதுவரை இஸ்ரேல் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்காமல் உள்ளமை குறிப்பிடத்தக்க்க விடயமாகும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?