மே தினத்தன்று ட்ரோன்கள் பறக்க தடை
Sri Lanka PoliceMay DaySri Lanka
2 hours ago
Anadhi
in பாதுகாப்புமே தினக் கொண்டாட்டங்களை காணொளி பதிவு செய்ய அனுமதியின்றி ட்ரோன்களை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு அவசியமானால் அதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துத தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு
இது, நாடளாவிய ரீதியில் நடைபெறும் அனைத்து மே தின பேரணிகளுக்கும் பொருந்தும் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
மே தினப் பேரணிகளில் கலந்து கொள்ளும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேறகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்