முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 570 மிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

 

தமிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல் | Europe Country Child Kitnaping

 By Dhayani an hour ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு குழந்தைகளை கடத்தி செல்லும் ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளையைச் சேர்ந்த 76 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 17 இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியதன் மூலம் அவர் மனித கடத்தல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவின் இடர் மதிப்பீட்டு பிரிவிற்கு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

உலகில் இலங்கையர்களை போன்று நல்லவர்கள் இல்லை! கொத்து ரொட்டி சர்ச்சையில் சிக்கிய சுற்றுலா பயணி நெகிழ்ச்சி

உலகில் இலங்கையர்களை போன்று நல்லவர்கள் இல்லை! கொத்து ரொட்டி சர்ச்சையில் சிக்கிய சுற்றுலா பயணி நெகிழ்ச்சி

தமிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல் | Europe Country Child Kitnaping

மலேசிய குடிவரவுத்திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிப்பு

அதன்படி, இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் இடர் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர் குறித்து மலேசிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2022 டிசம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை 17 இலங்கைக் குழந்தைகளை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களில் 13 சிறுவர்களின் தகவல்கள் குடிவரவு திணைக்கள பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்

இந்தக் குழந்தைகளில் 08 பேர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மீதமுள்ள 05 பேர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து எடுக்கப்பட்டு முதலில் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர், மலேசிய குழந்தைகளாக தேவையான ஆவணங்களைத் தயாரித்து, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல் | Europe Country Child Kitnaping

இந்த பின்னணியில் கடந்த 25 ஆம் திகதி 14 வயது சிறுவன் ஒருவரை தந்தையுடன் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லவிருந்த ஒருவரை கோலாலம்பூர் விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி நேற்று காலை 09.30 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியாவின் ஏ.கே. - 047 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட அவர்கள், விமான நிலையத்தில் குடிவரவு திணைக்களத்தின் புலனாய்வு திணைக்களத்தின் இடர் மதிப்பீட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?