காலத்தால் அழியாத நினைவுகள்?
கருவிடுஉன்னைப் பார்க்கையில்என் தங்கையின் நினைவுகள் நெஞ்சில் மேகமாயின
யாருக்கும் தெரியாமல் சில பிரார்த்தனைகளை ஒழித்து வைத்தேன்
செல் மழை நடுவிலும்
குருதி ஆற்றிச் சுனாமியிலும்
உனக்கான பிரார்த்தனைகளை ஒழித்து வைத்தேன்
யாருமறியா என் பிரார்த்தனைகளை
எந்தக் கோயில்களில் பூசிப்பேன்
அர்த்தம் அறியா என் பிரார்த்தனைகளை
எந்த மொழியால் பாடுவேன்
சோதரியே
உள்ளிருக்கும் பிரார்த்தனைகள் உனக்கானவை
நீ காணாமல் ஆக்கப் படுகையில்
யாரோ உன்னைப் பிடித்துச் செல்கையில்
நீ எப்படித் துடித்திருப்பாய்
நீ எந்த மொழியால் கதறி இருப்பாய்
எல்லாப் பெண்களையும் போல்
உனக்குள்ளிருக்கும்
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பை
என்ன செய்திருப்பாய்
இறுதியாகக் கவனம் என்று சொல்லிச் சென்றேனே
உன்னைத் தகனமாக்கினரா
நீ தப்பிச் சென்றாயா
அறியாத கோடுகளில் நான் நடத்து
வருடம் பத்தைக் கடந்தது
இனி இனிமைகள் பற்றிக் கவி எழுத
இன்பங்கள் பற்றி கனவெழுத காலம் போதாது
ஒரு வேளை நினைவுகள் திரும்பி
உயிருடன் வந்தால்
என் கவிதையின் கல்லறையில்
உன் புன்னகையைத் தூவு
ஏனெனில்
உனை நினைக்கும் போதெல்லாம்
நான் செத்தவன்
உனைக் காப்பாற்றாதவன்
கருத்துகள்