முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 557 மாதுளம் பழம்தொடர்ந்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?

 

அழகை அள்ளித்தரும் மாதுளம் பழம்! பிரம்மிக்க வைக்கும் நலன்கள்

அழகை அள்ளித்தரும் மாதுளம் பழம்! பிரம்மிக்க வைக்கும் நலன்கள் | Benefits Of Eating Pomegranate Daily Tamil
PomegranateHealthy Food Recipes
 5 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

பொதுவாக தினமும் பழங்களை உட்கொள்வதால் மனித உடலுக்கு பல மருத்துவ மற்றும் அழகுசார் நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.

இதற்கமைய, பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட மாதுளையை தினந்தோறும் உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மிக குறைந்தளவு கலோரிகள் கொண்டுள்ள மாதுளை, அதிகளவான விட்டமீன்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகளை கொண்டுள்ளதாகவும், இவை மனித உடலின் நாளாந்த செயல்பாடுகளுக்கு பாரியளவில் உதவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாதுளம் பழம்

உலகில் உள்ள பழங்களிலேயே மிக பழமையான மாதுளம் பழத்தில், 720 வகைகள் உள்ளன.

அழகை அள்ளித்தரும் மாதுளம் பழம்! பிரம்மிக்க வைக்கும் நலன்கள் | Benefits Of Eating Pomegranate Daily Tamil

முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா! இந்த மூன்று பொருட்கள் போதும்..

முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா! இந்த மூன்று பொருட்கள் போதும்..

நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும் கொண்ட இந்த மாதுளம் பழம், பிளேக், புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கும் மகத்துவத்தை கொண்டுள்ளது.      

நலன்கள்

மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்தி கொண்டவை.

அழகை அள்ளித்தரும் மாதுளம் பழம்! பிரம்மிக்க வைக்கும் நலன்கள் | Benefits Of Eating Pomegranate Daily Tamil

கோடையிலும் முகம் பளபளவென்று இருக்க வேண்டுமா! இந்த பொருட்கள் இருந்தா போதும்..

கோடையிலும் முகம் பளபளவென்று இருக்க வேண்டுமா! இந்த பொருட்கள் இருந்தா போதும்..

மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் விட்டமீன் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும். ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.

அத்துடன், அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும். கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.

மருத்துவ நன்மைகள்

ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது.


தொப்பையால் அவதிப்படுகிறீர்களா! இலகுவில் குறைய இதை மட்டும் செய்யுங்கள்...

தொப்பையால் அவதிப்படுகிறீர்களா! இலகுவில் குறைய இதை மட்டும் செய்யுங்கள்...

செரிமானப் பிரச்சினைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.

உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை மாதுளம் பழம் தூண்டுவதால், எலும்புகள் வலுப்பெற உதவும். மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன.

தினமும் 100 மில்லிலீற்றர் மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?