முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 564 வெடித்து சிதறிய செல்போன் ; இளம் பெண் பலி

 

வெடித்து சிதறிய செல்போன் ; இளம் பெண் பலி

வெடித்து சிதறிய செல்போன் ; இளம் பெண் பலி | Woman Killed Accident Due Phone Explosion
 By Sahana 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

செல்போன் வெடித்ததால், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணம் பெருக நீங்க மஞ்சள் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

பணம் பெருக நீங்க மஞ்சள் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

பொலிஸார் விசாரணை 

உத்தரப்பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள நெஹ்ராரியா கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயதான பூஜா மோட்டார் சைக்கிளில் கான்பூர் – அலிகார் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

வெடித்து சிதறிய செல்போன் ; இளம் பெண் பலி | Woman Killed Accident Due Phone Explosion

அப்போது அவரது பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூஜாவின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது.

வீதியில் இருந்த டிவைடரில் பூஜாவின் மோட்டார் சைக்கிள் மோதியது. அப்போது பூஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

விபத்து

இதனால் அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்த பொலிஸார், படுகாயமடைந்த பூஜாவை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர் இதுதொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தினர்.


அப்போது ஹெல்மெட் அணியாத பூஜா மோட்டார் சைக்கிளில் அதிவேகத்தில் இயர்போனில் பேசிக்கொண்டே வந்ததாகவும், அப்போது செல்போன் திடீரென வெடித்து அதனால் அவர் வண்டி நிலைகுலைந்து டிவைடரில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.

விபத்தில் அதிக இரத்தம் வெளியேறியதால் பூஜா உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் வெடித்து அதனால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?