முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f561 தேவையற்றகட்டுப்பாடுகளால் வெளியேறும் நிலை உருவாகும் வட்ஸ்அப்

 

இந்தியாவை விட்டு வெளியேறும் வட்ஸ்அப் நிறுவனம்! வெளியானது காரணம்

 By Eunice Ruth 3 hours ago
WhatsApp threatens to leave India
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவிலிருந்து வெளியேற நேரிடும் என வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரித்துள்ளது. 

வாட்ஸ்அப்-ன் அம்சமான எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ (end-to-end encryption) உடைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படுமென டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு புதிய சேவை!

வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள மற்றுமொரு புதிய சேவை!

புதிய சட்டம்

கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசால் தகவல் தொழில்நுட்ப விதிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது.


சூரியனில் நிகழ்ந்த அரிய சுழற்சி: பூமிக்கு ஆபத்து...!

சூரியனில் நிகழ்ந்த அரிய சுழற்சி: பூமிக்கு ஆபத்து...!

இதையடுத்து, சமூக வலைதளங்களில் பயனாளர்களின் உரைகளை கவனித்து அவர்களை அடையாளம் காண வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துவதாக மெட்டா நிறுவனம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் தேஜஸ் கரியா, வாட்ஸ்அப்பின் பிரைவசியை (Privacy) கருத்தில் கொண்டு இந்தியாவில் 400 மில்லியன் மக்கள் இதனை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்

இது குறித்து நீதிமன்றில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன் என்பது வாட்ஸ்அப்பில் செய்திகளை (Messages) அனுப்பியவரும், அதை பெறுபவரும் மட்டுமே தாங்கள் அனுப்பிய செய்திகளை பார்க்க முடியும்.

WhatsApp threatens to leave India

மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து! ரகசியத்தை அம்பலப்படுத்திய டிரான் அலஸ்

மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து! ரகசியத்தை அம்பலப்படுத்திய டிரான் அலஸ்

இந்த அம்சத்தால் மட்டுமே மக்கள் அச்சமின்றி இதனை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்ப விதிகள், இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14, 19 மற்றும் 21, ஆகியவற்றை மீறும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறான சட்டங்கள் வேறு மற்ற எந்த நாடுகளிலும் இல்லை. பிரேசிலில் கூட இல்லை. எந்த செய்திகளையும் டிகிரிப்ட் (Decrypt4) செய்யச் சொல்லி கேட்கப்படும் என்பது எங்களுக்குத் தெரியாது.

எனவே, எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ உடைக்க மத்திய அரசு எங்களை கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும்” என தெரிவித்துள்ளார். 

வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்! மத்திய வங்கி தகவல்

வலுவடைந்த இலங்கையின் பொருளாதாரம்! மத்திய வங்கி தகவல்

ஒத்திவைக்கப்பட்ட வழக்கு

இதையடுத்து, சட்டத்திற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், இன்றைய காலகட்டத்துக்கு இத்தகைய செயல்முறையும் சட்டமும் அவசியம் என வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?