முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 463 இலங்கையில் நடப்பது என்ன?

 

இலங்கையில் விபரீத முடிவை எடுத்த லண்டன் வாழ் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்! மர்ம பின்னணி

இலங்கையில் விபரீத முடிவை எடுத்த லண்டன் வாழ் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்! மர்ம பின்னணி | London Tamil Millionaire Commits Suicide Sri Lanka
 By Shankar 2 hours ago
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

பிரித்தானிய தலைநகரான லண்டனில் கோடீஸ்வர வர்த்தகராக உள்ள 51 வயதான தமிழர் வெள்ளவத்தைப் பகுதியில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகின்றது. 

குறித்த வர்த்தகர் கடந்த வருட இறுதியில் இருந்து இலங்கையில் தங்கியுள்ளார்.

உயிரிழந்த மகளின் பெயரில் கொழும்பு வைத்தியசாலை வரும் நோயாளிகளுக்கு இலவச உணவு!

உயிரிழந்த மகளின் பெயரில் கொழும்பு வைத்தியசாலை வரும் நோயாளிகளுக்கு இலவச உணவு!


தங்கியிருந்த காலப்பகுதியில் 4 தடவைக்கு மேல் லண்டனிலிருந்து 12 கோடி ரூபாக்களுக்கும் அதிகமான மதிப்பான பவுண்ஸ்களை மாற்றியுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

தற்போது தற்கொலைக்கு முயன்ற பின்னரே இது தொடர்பாக வர்த்தகரின் மனைவி மற்றும் பிள்ளைகள் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.

இலங்கையில் ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையா? வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கையில் ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையா? வெளியான முக்கிய அறிவிப்பு

வெள்ளவத்தைப் பகுதியில் உள்ள வர்த்தகருக்கு சொந்தமான பங்களாவிலேயே வர்த்தகர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இலங்கையில் விபரீத முடிவை எடுத்த லண்டன் வாழ் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்! மர்ம பின்னணி | London Tamil Millionaire Commits Suicide Sri Lanka

குறித்த வர்த்தகர் 18 நாட்கள் தங்குவதாக தெரிவித்தே அவர் இலங்கைக்கு சென்றதாக அவரது மனைவி கூறினார்.

இருந்தும் தான் மேலும் சில நாட்கள் இலங்கையில் தங்க வேண்டியுள்ளதாகவும் தனது நண்பனுடன் சேர்ந்து கம்பனி ஒன்று ஆரம்பிக்க உள்ளதாகவும் மனைவியிடம் கூறியுள்ளார். அதன் பின்னர் லண்டனிலிருந்து பணம் பெற்றுள்ளார்.

மகள்கள் எதிர்நோக்கும் அவமானத்தை தாங்க முடியாது... கொலையாளி வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!

மகள்கள் எதிர்நோக்கும் அவமானத்தை தாங்க முடியாது... கொலையாளி வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!

தனது வீட்டுக்கு வந்து தங்கியுள்ள நேரத்தில் பல தடவைகள் தனது வீட்டு சமையல்காரர் மற்றும் பாதுகாவலரை விடுமுறையில் அனுப்பி தனியே அங்கு தங்கியுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் விபரீத முடிவை எடுத்த லண்டன் வாழ் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்! மர்ம பின்னணி | London Tamil Millionaire Commits Suicide Sri Lanka

விடுமுறை முடிந்து திங்கட்கிழமை காலை பாதுகாவலர் வந்த போது வீட்டின் சோபா செற்றியில் மயக்க நிலையில் கிடந்த வர்த்தகரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரியவருகின்றது.

அதன் பின்னரே குறித்த வர்த்தகர் துாக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற விடயம் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு வேலை மோகம்... நான்கு இலங்கையர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

வெளிநாட்டு வேலை மோகம்... நான்கு இலங்கையர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!

வர்த்தகர் கடந்த சனிக்கிழமை வீட்டில் தங்கியிருந்த வேளை அங்கு 13 வயது மதிக்கத்தக்க சிறுமியும் நடுத்தர வயதானவர்களும் வீட்டுக்குள் சென்று வந்துள்ளது சிசிரிவி கமரா மூலம் தெரியவந்துள்ளது.

இலங்கையில் விபரீத முடிவை எடுத்த லண்டன் வாழ் கோடீஸ்வர தமிழ் வர்த்தகர்! மர்ம பின்னணி | London Tamil Millionaire Commits Suicide Sri Lanka

 தற்போது வர்த்தகரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வர்த்தகர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தொடர்பில் கடுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது. 

இலங்கையில் எரிபொருள் பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இலங்கையில் எரிபொருள் பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இச் சம்பவம் தொடர்பாக வர்த்தகரின் நண்பர்கள் மூலமாக பொலிசார் சிலரும் தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

எனினும் இந்த தற்கொலை முயற்சி தொடர்பாக எந்தவொரு முறைப்பாடும் பொலிஸாருக்கு கொடுக்கப்படவில்லை என்பதுடன் எந்த வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற விபரமும் இரகசியமாகப் பேணப்படுவதாக தெரியவருகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?