முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news458

 .தமிழ் புகலிட கோரிக்கையாளர்களை நாடு கடத்தாதீர் -ஜேர்மன் அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை ஜேர்மனிக்கு பெருமளவில் சென்று அடைக்கலம் கோரியுள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கைக்கு நாடுகடத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாறு நாடு கடத்தும் திட்டத்தை ஜேர்மன் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜேர்மன் அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மார்ச் 30 ம் திகதி புகலிடக்கோரிக்கையாளர்களான பெருமளவு இலங்கை தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஜேர்மன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிந்து நாங்கள் பெரும் மனக்கலக்கம் அடைந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். ஜேர்மனியில் உள்ள தமிழ் சமூகத்திற்கு இது ஏற்படுத்தக்கூடிய வேதனை அச்சங்களிற்கு அப்பால் இலங்கையில் இடம்பெற்ற இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற மனித உரிமை மீறல்களிற்கு தீர்வை காண்பதற்கான சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் மீதும் இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜேர்மனி ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைமனித உர

TAMIL Eelam news 457

 சர்வதேச அரங்கில் கோட்டாபய அரசுக்கு ஏற்பட்டநிலை-அம்பலமான தகவல் “சர்வதேச அரங்கில் மிகவும் சொற்பளவான நட்பு நாடுகளையே ராஜபக்ச அரசு தக்கவைத்துள்ளது என்பதை அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் முன்வைக்கப்பட்ட புதிய தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் வெளிப்படுத்தியுள்ளன.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். மிக மோசமான பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து தற்போது மோசமான வெளிநாட்டுக்கொள்கைகளை நோக்கி ராஜபக்ச அரசு நகர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “ராஜபக்சக்கள் தலைமையிலான இலங்கை அரசு தற்போது ஒரு நெருக்கடியிலிருந்து மற்றுமொரு நெருக்கடிக்கு உட்பட்டிருக்கின்து. மிக மோசமான பொருளாதார நிர்வாகம், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கையாளப்பட்ட மோசமான உத்திகள் ஆகியவற்றிலிருந்து இப்போது பேரழிவு தரும் வெளிநாட்டுக் கொள்கைகளை நோக்கி அரசு நகர்ந்திருக்கின்றது. போர் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில், இப்போதுதான் வெளிநாட்டுக் கொள்கை மிகவும் மோசமான மட்டத்தில் பேணப்படுக

TAMIL Eelam news 456

 சூடுபிடிக்கும் இனப்படுகொலை சிறிலங்கா புலநாய்களின் அட்டகாசம் யாழில் தனிமையில் இருந்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை புத்தூர் - வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை ஒரு மணியளவில் அவரது வீட்டுக்கு அருகில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த துரைராசா சந்திரகோபல் (வயது-52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த பழைய பகையை வைத்து சிலர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

TAMIL Eelam news 455

 தமிழர் தாயகத்தை விட்டு இந்திய இராணுவம் வெளியேறிய நாள் — 24.03.1990  புலிகளிடம் பிடிபட்ட 18 இந்திய இராணுவம். “போர்க்கைதிகாளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 18 இந்திய இராணுவ வீரர்களைக் கட்டி அவர்கள் உடலில் டயர்களைப் போட்டு உயிரோடு புலிகள் கொளுத்திவிட்டார்கள்” என இந்திய அரசு திட்டமிட்ட பொய்ப்பிரச்சாரம் செய்தது.புலிகள் கொடூரமானவர்கள் என்று சித்தரிப்பதில் வானொலியும் தொலைக்காட்சியும் முன்னின்றன. ஆனால் நடந்தது என்ன? இந்தியாவின் பொய்முகத்தை விடுதலைப்புலிகள் அம்பலப்படுத்தினார்கள். 1987 ம் ஆண்டு நவம்பர் மாதம் உலகப்பத்திரிகையாளர் முன்னிலையில் 18 இந்திய இராணுவத்தையும் விடுதலைப்புலிகள் விடுவித்தனர்.இந்தியப்படையின் கட்டுப்பாட்டுக்கள் இருக்கும் யாழ்ப்பாண நகருக்குள் விடுதலைப்புலிகள் புகுந்தது எப்படி என்பது தெரியாமல் இந்திய அதிகாரிகள் திகைத்தனர். விடுவிக்கப்பட்ட இந்திய இராணுவ வீரர்களிடம் எந்தக்கேள்வியும் கேட்கவேண்டாமென இந்திய அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் கூறினார்கள்.ஆனால் விடுதலைப்புலிகள் குறுக்கிட்டு “நாங்கள் இவர்களை சித்திரவதை செய்தோமா? என்று கேளுங்கள்”எனக்கூறினார்கள்.கைது செய்யப்பட்டவர்களுள் ஒரு இந

TAMIL Eelam news 454

 “இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.   சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள

TAMIL Eelam news 453

 உலகையே அதிரவைக்கும் மூலையை- குறி வைக்கும் துப்பாக்கி – அப்படி என்றால் என்ன என்று தெரியுமா ? பொதுவாக ராணுவத்தினர் ஒரு கட்டத்தின் உள்ளே இருந்து, அல்லது ஜன்னல் வழியாக வெளியே சுடுவது என்றால் நேராகத் தான் சுட வேண்டும். உதாரணமாக ஜன்னல் வழியாக இடது பக்கம் அல்லது வலது பக்கம் உள்ள நபரை சுட அவர்கள் துப்பாக்கியை அந்த திசை நோக்கி நகர்த்த வேண்டும். அதேவேளை அவரும் எதிரிகளின் கண்களில் தென்படுவார். ஆனால் முதன் முறையா கோனர்களை( அதாவது மூலை முடுக்கை) சுடும் அதி நவீன துப்பாக்கியை பிரித்தானியா தனது படைக்கு கொடுத்துள்ளது.   எனவே துப்பாக்கியின் பின் பக்கம் நேராக இருக்கும். ஆனால் சுடும் பகுதி வலது அல்லது இடது பக்கம் திருப்பக் கூடியது. மேலும் சொல்லப் போனால் துப்பாக்கி முன்னால் உள்ள கமரா பின் பகுதியில் டிஸ்பிளே அவதனால், எதிரிகளை குறி பார்த்து சுட முடியும். உங்கள் உருவத்தை வெளியே காட்டாமல். இது ராணுவத்தின் உயிர்களை காக்கும் ஒரு பொறி முறையாகும் . அந்த வகையில் மிகவும் அதி நவீன துப்பாக்கிகளை பிரித்தானியா தனது எஸ்.ஏ.எஸ் படைகளுக்கு கொடுத்துள்ளது 

TAMIL Eelam news 452

 மனைவியின் குடும்பத்தினருக்கு மீன் குழம்பில் தாலியம் ரசாயனத்தை கலந்து கொடுத்து கொலை! டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை சேர்ந்தவர் வருண் அரோரா, தனது மனைவி திவ்யாவின் குடும்பத்தினருக்கு மீன் குழம்பில் தாலியம் என்ற ரசாயனத்தை கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார்.   கடந்த ஆண்டு தனது குழந்தையை கருக்கலைப்பு செய்வதற்கான தனது மனைவியின் முடிவை ஆதரித்ததற்காக வருண் மாமியார் மீது வெறுப்படைந்தார். இந்த நிலையில் தாலியம் என்ற வேதிப்பொருளைக் கலந்து தனது மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதானால் கடந்த ஆண்டு இறந்த தனது தந்தை தனது குழந்தையாக மறுபிறவி எடுப்பார் என்று அவர் நம்பினார். வயதான வருண் மாமியார் அனிதா தேவி சர்மா( 62) மற்றும் அவரது இளைய மகள் பிரியங்கா (27) ஆகியோர் இரண்டு மாத காலப்பகுதியில் மருத்துவமனையில் இறந்தனர், அதே நேரத்தில் அவரது மனைவி திவ்யா, 35, கோமாவில் உள்ளார். போலீசார் விசாரணையில் அரோராவின் மாமியார் உடம்பில் தாலியம் என்ற ரசாயனத்தின் தடயங்கள் இருந்ததாகவும், மனைவியின் சகோதரியும் இதன் காரணமாக உயிரிழந்துள்ளார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் இச