முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 425 கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு!

 

கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம்

கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம் | Young Family Woman Suicide By Writing A Letter
Sri Lanka PolicePuttalamSri Lanka Police Investigation
 By Shankar 3 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

புத்தளம், பாலாவி - ரத்மல்யாய, முல்லை ஸ்கீம் கிராமத்தில் இளம் தாய் ஒருவர் இன்றைய தினம் (01-11-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் 34 வயதான முஹம்மது ஹனீபா பாத்திமா மபாஸா எனும் 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்துள்ளார்.


நேற்றிரவு 1.30 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் வீட்டில் கணவனும், 3 பிள்ளைகளும் தூங்கிய பின்னர் குறித்த இளம் பெண் விட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.

கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம் | Young Family Woman Suicide By Writing A Letter

குறித்த இளம் பெண்ணுக்கும், கணவனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உள்ளான நிலையிலேயே அந்த இளம் பெண் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தனது கணவரால்தான் தான் இந்த முடிவை எடுத்ததாகவும், தனது 3 பிள்ளைகளையும் தனது தாயிடம் ஒப்படைக்குமாறும் உயிரிழந்த இளம் பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

மேலும், தனது 3 பிள்ளைகளையும் நன்றாக பாரத்துக் கொள்ளுமாறும் தனது சகோதரனுக்கு அறிவுரை கூறி அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம் | Young Family Woman Suicide By Writing A Letter

அத்தோடு ''என்னை மன்னித்து விடுங்கள்'' என்று உயிரிழந்த இளம் பெண் தனது இடது கையிலும் பேனையால் எழுதியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் எண்ணத்தில் சுருக்கிட்டுக் கொண்டமையால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்பளித்து சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,