முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 425 கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு!

 

கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம்

கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம் | Young Family Woman Suicide By Writing A Letter
Sri Lanka PolicePuttalamSri Lanka Police Investigation
 By Shankar 3 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

புத்தளம், பாலாவி - ரத்மல்யாய, முல்லை ஸ்கீம் கிராமத்தில் இளம் தாய் ஒருவர் இன்றைய தினம் (01-11-2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் 34 வயதான முஹம்மது ஹனீபா பாத்திமா மபாஸா எனும் 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்துள்ளார்.


நேற்றிரவு 1.30 மணிக்கும் 2 மணிக்கும் இடையில் வீட்டில் கணவனும், 3 பிள்ளைகளும் தூங்கிய பின்னர் குறித்த இளம் பெண் விட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அங்கு சென்ற பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விசாரணைகளையும் முன்னெடுத்தனர்.

கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம் | Young Family Woman Suicide By Writing A Letter

குறித்த இளம் பெண்ணுக்கும், கணவனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உள்ளான நிலையிலேயே அந்த இளம் பெண் துக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தனது கணவரால்தான் தான் இந்த முடிவை எடுத்ததாகவும், தனது 3 பிள்ளைகளையும் தனது தாயிடம் ஒப்படைக்குமாறும் உயிரிழந்த இளம் பெண் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.

மேலும், தனது 3 பிள்ளைகளையும் நன்றாக பாரத்துக் கொள்ளுமாறும் தனது சகோதரனுக்கு அறிவுரை கூறி அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் குடும்ப பெண் எடுத்த தவறான முடிவு! இலங்கையில் பெரும் சோகம் | Young Family Woman Suicide By Writing A Letter

அத்தோடு ''என்னை மன்னித்து விடுங்கள்'' என்று உயிரிழந்த இளம் பெண் தனது இடது கையிலும் பேனையால் எழுதியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த இளம் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் எண்ணத்தில் சுருக்கிட்டுக் கொண்டமையால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்பளித்து சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?