ஈரான் தலைமையிலான பயங்கரவாதம் : உலக நாடுகளுக்கு அழைப்பு விடும் நேதன்யாகு
By pavan 8 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********
நீங்கள் ஹமாசுக்கு எதிராக நிற்க வேண்டும். எங்கள் போர் உங்கள் போர் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போர் நீடித்து வருகிறது.
காசாமீது இஸ்ரேல், வான், கடல், தரைவழி என மும்முனை தாக்குதல் நடத்திவருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், ஈரான் தலைமையிலான பயங்கரவாதத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஹமாஸ் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேலும், தங்கள் நாடுகளின் எதிர்காலம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன், நீங்கள் ஹமாசுக்கு எதிராக நிற்க வேண்டும்.
எங்கள் போர் உங்கள் போர். இந்தப் போரில் எங்களுக்காகவும் உங்களுக்காகவும் நாங்கள் வெல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.
கருத்துகள்