முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 473 காணாமல் ஆக்கிய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசு

 

காணாமல் ஆக்கிய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசு

காணாமல் ஆக்கிய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசு | Ranil S Government Admits To Disappearance
 By Kirupa 3 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதி கோரி தாம் முன்னெடுக்கும் போராட்டங்களை மழுங்கடிப்பதற்கான மற்றுமொரு திட்டமாகவே சிறிலங்கா அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான இழப்பீட்டிற்கான நிதி ஒதுக்கும் நடவடிக்கை அமைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கிய குற்றங்களை மேற்கொண்டுள்ளதை தாமே ஒப்புக்கொள்ளும் வகையிலேயே காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.

போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சி

மயிலத்தமடு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற நீதிமன்றம் உத்தரவு

மயிலத்தமடு சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற நீதிமன்றம் உத்தரவு

சிறிலங்கா அரசாங்கத்திடம் நீதி கேட்டு, அந்த முயற்சி தோல்வி கண்ட நிலையிலேயே தாம் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


போராட்டத்தை குழப்பும் சிறிலங்கா அரசின் முயற்சி தமது உறவுகளைத் தேடும் போராட்டம் 2, 500 நாட்களை அண்மித்துள்ளதாகவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி கோரிய தமது போராட்டத்தை குழப்புவதற்கும் நோக்குடன் இழப்பீடுகள் வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்து சிறிலங்காவின் கடந்த அரசுகள் முயற்சித்த போதிலும் தமது போராட்டம் சர்வதேச நீதியை வேண்டி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தமது போராட்டத்தை மழுங்கடிக்கும் முயற்சியாக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல்

ஓ.எம்.பி பெயரில் வீணடிக்கப்பட்ட பணம்

ஓ.எம்.பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம் ஊடாகவும் தமக்கு இழப்பீடு வழங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கிய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசு | Ranil S Government Admits To Disappearance

எனினும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு வெளிநாடுகளால் 1.4 ரில்லியன் ரூபா பணம் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் அந்தப் பணமானது.

பணிக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்கள், அதிகாரிகளுக்கான சம்பளமாகவும், அவர்களுக்குரிய கொடுப்பனவு, கட்டட வசதிகளுக்கே செலவு செய்யப்பட்டதாகவும் லீலாதேவி ஆனந்தநடராஜா சுட்டிக்காட்டினார்.

அந்த பணமானது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் தூபியுடன் தொடர்புபடுத்தி விசமப் பிரசாரம் : குற்றச்சாட்டை மறுக்கும் பேராசிரியர்

முள்ளிவாய்க்கால் தூபியுடன் தொடர்புபடுத்தி விசமப் பிரசாரம் : குற்றச்சாட்டை மறுக்கும் பேராசிரியர்

குற்றமிழைத்த கடந்த கால சிறிலங்கா அரசுகள்

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கென வரவு செலவுத் திட்டத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்திருப்பதானது, தமது குற்றத்தை ஒப்புக்கொள்வதை போன்றே அமைவதா லீலாதேவி ஆனந்தநடராஜா கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கிய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசு | Ranil S Government Admits To Disappearance

உறவொன்று காணாமல் போனால், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையே முதலில் அறிய வேண்டும் எனவும் எனினும், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு கடந்த கால அரசுகளே காரணம் என்பதை இந்த நிதி ஒதுக்கீடு மூலம் மறைமுகமாக ரணில் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேறு எந்தவித விசாரணைகளைப் பற்றியும் கதைப்பதை விடுத்து, நேரடியாக இழப்பீட்டை வழங்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்றே தீர்மானிக்க வேண்டியுள்ளது என லீலாதேவி ஆனந்தநடராஜா கூறியுள்ளார்.

இலங்கையில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை: தடையினால் பாதிக்கப்படுமா..!

இலங்கையில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை: தடையினால் பாதிக்கப்படுமா..!

இழப்பீடு அல்ல, உறவுகளே வேண்டும்

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இராணுவத்திடம் ஒப்படைத்த, சரணமடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட உறவுகளையே தேடிக்கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் ஆக்கிய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ரணில் அரசு | Ranil S Government Admits To Disappearance

சிறிலங்கா அரசிடம் இருந்து எந்தவொரு இழப்பீட்டையும் தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர்களிடம் பெறப் போவதும் இல்லை எனவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசிடம் இருந்து நீதியே கிடைக்காது என முடிவுக்கு வந்த தாம், அவர்களிடம் இருந்து இழப்பீட்டை எதிர்பார்க்கப் போவதில்லை எனவும் லீலாதேவி ஆனந்தநடராஜா சுட்டிக்காட்டினார்.

இந்த இழப்பீட்டானது, சிறிலங்கா அரசின் வேறு தேவைகளுக்காக தமது பெயரில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் விமர்சித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,