முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 471ஆட்சியாளர்களின் மனநிலையால் கேவலமடைந்த இலங்கை

 

ஆட்சியாளர்களின் மனநிலையால் கேவலமடைந்த இலங்கை : சொர்க்கபுரியாக மாற்றும் திறன் தமிழர்களிடமாம்

ஆட்சியாளர்களின் மனநிலையால் கேவலமடைந்த இலங்கை : சொர்க்கபுரியாக மாற்றும் திறன் தமிழர்களிடமாம் | Gajendran Press Current Situation Of Sri Lanka
 By Vanan 3 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

சிறிலங்கா ஆட்சியாளர்களின் மனநிலை காரணமாகவே ஆசியாவிலேயே கேவலமடைந்த நாடாக இலங்கை மாறியுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், ஒரு சமூகத்துக்காக குரல் கொடுக்கின்றவர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட வரலாறுகளே காணப்படுவதாக விமர்சித்துள்ளார்.

சம்பந்தனின் உணர்ச்சிகரமான கருத்திற்கு கடும் விமர்சனம்

சம்பந்தனின் உணர்ச்சிகரமான கருத்திற்கு கடும் விமர்சனம்

ஆட்சியாளர்களின் மனநிலை

அவர் மேலும் கூறுயைில், ஆசியாவிலேயே மிகக்கேவலமான ஒரு நாடாக இலங்கை மாறியிருக்கிறது. இதற்கு  இந்த நாட்டின் ஆட்சியாளர்களுடைய மனநிலை தான் காரணம்.


ஒரு காலத்தில் சிங்கப்பூர் போன்று இலங்கை வரவேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், இன்று சிங்கப்பூரானது உலகத்திலேயே முன்னேறிய நாடாக எங்கேயோ சென்று விட்டது.

ஆனால் இங்கே நாங்கள் வாழ முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். காரணம் என்னவென்றால் இந்த நாட்டினுடைய ஆட்சியாளர்களின் மனப்பாங்குதான் அதற்கான காரணம்.

தமிழர்களிடம் இருக்கும் ஆற்றல்

ஒன்று, சக இனத்தவர்களை அவர்கள் வாழ விடத் தயாராக இல்லை.

ஏனையவர்களை அழித்து இந்தத் தீவை சிங்கள பௌத்த தீவாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். 

மறுபுறத்திலே தாங்கள் ஆட்சியில் இருந்து கொண்டு கொள்ளையடித்து நாட்டை குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆட்சியாளர்களின் மனநிலையால் கேவலமடைந்த இலங்கை : சொர்க்கபுரியாக மாற்றும் திறன் தமிழர்களிடமாம் | Gajendran Press Current Situation Of Sri Lanka

ஆகவே இவர்களால் இந்த நாட்டை ஒரு போதும் கட்டியெழுப்ப முடியாது. 

அம்பிட்டியவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிக்கிறது : எச்.எம்.எம். ஹரீஸ் ஆதங்கம்

அம்பிட்டியவுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காமை ஏமாற்றமளிக்கிறது : எச்.எம்.எம். ஹரீஸ் ஆதங்கம்

எங்களுடைய தேசம் அதிகரிக்கப்படுமாக இருந்தால், இந்த ஒற்றையாட்சியை கடந்து தமிழ் தேசம், இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை அரசியல் தீர்வை நாங்கள் எட்ட முடியுமாக இருந்தால், இந்தத் தீவிலேயே வடக்கு கிழக்கு ஒரு சொர்க்கபுரியாக மாற்றப்படக்கூடிய அளவிற்கு தமிழர்களிடம் ஆற்றலும் ஆளுமையும் இருக்கிற” - என்றார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?