தமிழர் தாயகத்தை இணைத்து தனி மாகாணம் : இந்தியாவிடம் விடுத்த கோரிக்கையால் சர்ச்சை
(மாவீரர்பாடல் இணைப்பு)

By Vanan 36 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)
தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை இணைத்து இந்து மக்களுக்கு தனி மாகாணத்தை உருவாக்க வேண்டும் என மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையிலான சிவசேனை அமைப்பு இந்தியாவிடம் வேண்டுகொள் விடுத்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிவசேனை இதனைத் தெரிவித்துள்ளது.
தமது நான்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவானது அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய துணை உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் ஊடாக கையளிக்கப்பட்டுள்ளதாக சிவசேனை அறிவித்துள்ளது.
1) 1987 இந்தியா இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தை இணைத்து இந்து மக்களுக்கு தனி மாகாணத்தை உருவாக்க வேண்டும்.
2)தமிழகத்தில் உள்ள பாரதிய வித்தியா பவன் அழைப்பு யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் கலைகள் இசைகள் என்பவற்றை கற்பிக்க வேண்டும்
3)காங்கேசன்துறை - நாகப்பட்டினம் துறைமுகங்களில் இலங்கை மற்றும் இந்திய ரூபாயை மாற்ற வங்கி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
4)மதமாற்றம் செய்பவர்களை இந்தியாவில் இருந்து இலங்கைக்குள்ளும் இலங்கையில் இருந்து இந்தியாவுக்குள்ளும் அனுமதிக்க கூடாது.
கருத்துகள்