சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் வரலாறு மின்நூல் !
Brigadier Balraj reserved hero by on Scribd
“லீமா” பெயரை கேட்டாலே மகிழும் போராளிகள்…
எங்கள் பாதை நெடுக பல சோகக் கதைகள்தான் உண்டு எனினும் உற்சாகம் தந்த நாட்களும் கணங்களும் உண்டு.
தரையில் காலூன்றி நின்ற எங்கள்
தாரகைகள் நடுவே – நீ
தங்கத் தண்மதியாய் நின்ற சமர்க்கள நாயகன் எமைப் பாராட்டிய தருணம்தான் அந்த உற்சாக தருணம் ஆகும்.
சோழர்கள்(செம்பியர்கள்) தரையிறங்கிய செம்பியன்பற்றுக்கு மிக அருகே பல நூறு ஆண்டுகளின் பின்னர் தமிழர் படையுடன் தரையிறங்கி பகை வென்ற பெருந்தளபதியைப் பற்றிய சிறு துளியையும் எங்களது உணர்வையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்!
குடாரப்பு தரையிறக்கம்(26/03/2000) நடைபெற்று சில திங்களின் பின் ஒரு நாள் பளைபகுதியில் இருந்த எங்கள் பிரதான மருத்துவ முகாமில் சமர்களநாயகன் #எங்களைச் #சந்தித்தார்.
சமர்களநாயகனின் சந்திப்புகள் அவர் எப்போதுமே வாசம் செய்யும் களமுனையிலோ அல்லது அதனை அண்டிய பிரதேசங்களிலேயேதான் நடைபெறும்.
இச்சந்திப்பும் அதற்கு விதிவிலக்கல்ல.
நண்பர் மிரேஸ் இருநிமிட அகவணக்கத்துடன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
குடாரப்புத் தரையிறக்கம் தந்த வெற்றியின் பின்னணியில் உழைத்த மருத்துவபோராளிகளையும்
கள மருத்துவர்களையும் பாராட்டுவதுதான் அன்றைய அவரின் சந்திப்பின் பிரதான நோக்கம்.
எழுதுமட்டுவாள் களமுனையில் அஞ்சாநெஞ்சுடன் போராடிய லெப்.கேணல் ராஜசிங்கனையோ அல்லது ஜோயையோ பாராட்டுவது போலவே மருத்துவ போராளிகளைப் பாராட்டினார்.
களமுனை மருத்துவபோரளிகளைக் கடந்து எமது வைத்தியசாலைகளில் உள்ள அனைத்து வைத்தியர்கள்,தாதியர்கள் ,பணியாளர்கள் அனைவருக்கும் தனது நன்றியைக் கூறினார் சமர்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜ்.
ஆனையிறவை இழந்தவன் விரைவில் மீண்டும் ஒரு பெரும் போரைத் தொடுப்பான் என்பதை முன் கூட்டியே உணர்ந்து எம்மை உற்சாகப்படுத்துகிறார் என ஒரு தடவை நினைத்தாலும் அவரது பாராட்டினால் உண்மையில் எல்லோருக்குள்ளும் உற்சாகமும் உவகையும் தொற்றிக்கொண்டது.
தவறுகளையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.
மும்முனைத் தாக்குதலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாகவும் பத்திரமாகவும் 1000இற்குமதிகமான தரைப்புலிகளைத் தரையிறக்கிய கடல்ப்புலிகளின் விநியோக வழிகளை முறியடித்தார்கள் அரச கடற்படையினர்.
முன்னரே நாம் இதை எதிர்பார்த்தால் மூன்று நாட்களும் உணவு இன்றி சோர்ந்து போகவில்லை.தேவையானளவு உலர் உணவுகளை எம்மோடு எடுத்து வந்திருந்தோம்.காயமடைந்தவர்களை அங்கேயே வைத்துப் பராமரிப்பதிலும் சிக்கல் வரவில்லை ஆனால் 26ஆம் தேதி வீரச்சாவு அடைந்தவர்களின் வித்துடல் பழுதடைய ஆரம்பித்ததால் தளபதி செல்வராசா அவர்களின் அனுமதியுடன் விநியோக வேலைகளுக்கு பொறுப்பாகவிருந்த கஜேந்திரனின் உதவியுடன் நாம் தரையிறங்கிய கடற்கரையில் விதைத்தோம்.
வித்துடல்களை விதைத்து சிலமணி நேரங்களின் பின்னர், முன்னரே திட்டமிட்டபடி (சபதமெடுத்தபடி) மருதங்கேணி இராணுவ முகாமை தகர்த்து தாளையடிக் கடற்கரை ஊடகத் தரைவழிப்பாதையை அமைத்துத் தந்தார் வீரத்தளபதி தீபன் அவர்கள்.எனவே வித்துடல்களை விதைத்தத்தில் அவசரப்பட்டுவிட்டதாக கோபத்துடன் சுட்டிக்காட்டினர் சமர்களநாயகன்.
எழுதுமட்டுவாள் பெட்டிச்சசமர் நடந்த பகுதியில் சிக்கிய மூன்று குடும்பங்களை சேர்ந்த ஆறுபேரை பக்குவமாக கிளிநொச்சிக்கு அனுப்பிவைத்தார் சமர்களநாயகன்.
அதில் நான்கு பேர் மிகவும் வயதானவர்கள் அவர்களில் ஒருவர் 93 வயது மூதாட்டி.எழுதுமட்டுவாளுக்கும் செம்பியன்பற்றுக்கும் இடையில் உள்ள நன்னீர் எரியூடகத்தான் அவர்கள் பக்குவமாக அனுப்பப்பட்டார்கள்.
சந்திப்பின் இறுதியில் அந்த மூதாட்டி தற்காலிமாக தங்கியிருந்த அக்கராயன் கிளிநொச்சி விலாசத்தை தனது குறிப்பேட்டில் குறித்துக்கொண்டார்
எழுதியது :மருத்துவர் தணிகை
கருத்துகள்