முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 498 13 /06,/ 2008 துணைத்தளபதி லெப். கேணல் றெஜித்தனின் வீரவணக்க நிகழ்வு மீழ்பிரசூரம்

 13 /06,/ 2008 துணைத்தளபதி லெப். கேணல் றெஜித்தனின் வீரவணக்க நிகழ்வு





தமிழீழத் தேசியத் தலைவரின் காலத்திலேயே எமது தேசத்தை வெல்வோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைய தொடக்கப் பயிற்சி கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார்.




இம்ரான் - பாண்டியன் படையணி துணைத்தளபதி லெப். கேணல் றெஜித்தனின் வீரவணக்க நிகழ்வில் வீரவணக்க உரை நிகழ்த்துகையில் அவர் மேலம் தெரிவித்துள்ளதாவது:



விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் 20 ஆண்டுகள் கடுமையான பணி செய்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் விருப்பத்துக்குரிய போராளியாக செயற்பட்டவர்தான் லெப். கேணல் றெஜித்தன்.


லெப். கேணல் றெஜித்தன் களமுனையில் நன்கு அறிமுகமானவர், சிறந்த போர் வீரனாக திகழ்ந்தவர். விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதங்களை இயக்குவதில் சிறந்த வல்லுநர்.


விடுதலைப் புலிகளின் கனரக ஆயுதப் படையணியையும் வான் எதிர்ப்பு படையணியையும் தாக்குதல் படை அணியையும் ஒருங்கிணைத்து செயற்பட்டவர்.


ஓயாத அலைகள் - 03 நடவடிக்கையில் றெஜித்தனின் பங்கு முக்கியமாக அமைந்தது. விடுதலைப் புலிகளின் வரலாற்றில் எதிரியின் உலங்குவானூர்திகளை வீழ்த்தியதில் இவரின் பங்கும் உண்டு.


அழிக்க முடியாத மாவீரர்களின் வாழ்ந்த வரலாற்றுக் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மாவீரர்களின் கனவை நனவாக்க தொடர்ந்து நடக்கும் இந்தச் சண்டையில் மக்கள் அனைவரும் தமது பணியை செவ்வனே செய்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் காலத்தில் விடுதலையை வென்றெடுக்க அணி திரளவேண்டும் என்றார் அவர்.

இம்ரான் - பாண்டியன் படையணியின் துணைத் தளபதி லெப். கேணல் றெஜித்தனின் வீரவணக்கக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


லெப். கேணல் ராஜன் கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் குமரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலக செயலர் சீரன் ஏற்றினார்.


லெப். கேணல் றெஜித்தனின் வித்துடலுக்கு அவரின் தாயார் சுடர் ஏற்ற, துணைவி, பிள்ளைகள் மற்றும் உடன்பிறப்புக்கள் மலர்மாலை சூட்டினர்.


தொடர்ந்து மலர்மாலைகளை

கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை

வடபோர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன்

இம்ரான் - பாண்டியன் படையணி சிறப்புத்தளபதி வேலவன்

படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளர் கேணல் ஆதவன்

நிதித்துறைப் பொறுப்பாளர்களில் ஒருவரான குட்டி

சோதியா படையணி சிறப்புத்தளபதி கேணல் துர்க்கா

தலைமைச் செயலக செயலர் சீரன்

மருத்துவ பிரிவுப் பொறுப்பாளர் மாறன்

தளபதி வசந்தன்

தளபதி வீரப்பன்

ராதா படையணி தளபதி சுயாஜி

லெப். கேணல் நவம் அறிவுக்கூடப் பொறுப்பாளர் தேவன்

விடுதலைப் புலிகளின் போர்ப்பயிற்சி ஆசிரியர் தினேஸ்

தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப் பொறுப்பாளர் கரிகாலன்


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?