இந்த நிகழ்வில் தமிழீழ தேசியப் பாடகி "பார்வதி சிவபாதம்" அம்மாவிற்கு வாகைக் குயில் எனும் உயரிய விருது வழங்கப்பட்டது.....
18/11/2023 அன்று முல்லை மண்ணின் வள்ளுவர் புரம் சங்கநாதம் கலா மன்ற மண்டபத்தில் இந் நிகழ்வு நடை பெற்றது......
இந்த நிகழ்வில் தமிழீழ தேசியப் பாடகி "பார்வதி சிவபாதம்" அம்மாவிற்கு வாகைக் குயில் எனும் உயரிய விருது வழங்கப்பட்டது.....
இந்நிகழ்வினது....
இவ் வானொயின் இணை அனுசரணையாளரும் மண்தந்த வரலாறு நிகழ்ச்சித் தொகுப்பாளருமான
ஆற்றலன் அவர்களின் பெற்றோர்களினால் வரவேற்பு விளக்கு ஏற்றி வைக்கப் பட்டு காலை பத்து மணிக்கு ஆரம்பமானது...
தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்பு நடைபெற்று அவர்களால் மங்கள விளக்கு ஏற்றி வைக்கப் பட்டு இரண்டு நிமிட அகவணக்கத்துடன் ஆசியுரையும்
அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்தும் இடம் பெற்று நிகழ்வு ஆரம்பம் ஆனது.....
வரவேற்புரயைக் கவிஞர்ஆர்.ஜெ. கலா
வழங்க அதனோடு யாழ் மருதம் கலை பண்பாட்டு பேரவை நடனத் தாரகைகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது...
பின்னர் மூத்த அறிவிப்பாளர் கலாபூஷணம் நடராஜா இராம நாதர் தலமை உரை வழங்க வானொலிக்கான வாழ்துக் கவிதை கவிஞர் கோபிகையினால் கவி பாடி
அதன் பின் விருது வழங்கல் நிகழ்வு பிரதம, முதன்மை, மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து பொன்னாடை அணிவித்து விருது வழங்கும் வைபவம் நடை பெற்றது.இந்நிகழ்வின் தொகுப்பினை
ஆர். ஜெ. கலா தொகுத்து வழங்க கவிஞர் திரியாயூரானின் ஒழுங்கு படுத்தலில் வாகைத் தமிழ் வானொலி யினால் "வாகைக் குயில்" எனும் உயரிய விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து நிகழ்ச்சியை வானொலிஅறிவிப்பாளர் மீனு தொகுத்து வழங்க பிரதமர் உரை அதைத் தொடர்ந்து சஞ்சிகை வெளியீடும், முதற் பிரதி வழங்கலும்
இடம் பெற்றது. வாகைத் தமிழ் வானொலி இயக்குனர் சார்பாக அவரது சகோதரர் தர்மலிங்கம் தினேஷ் அவர்களினால் முதற் பிரதி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. சஞ்சிகை பற்றிய நயவுரை,ஆய்வுரையை வித்தியா ரத்தினா வரதராஜன் வழங்கினார்.
பின்னர் முதன்மை விருந்தினர் உரையை அரச இலக்கிய விருதாளர் செல்லமுத்து வெளியீட்டக நிறுவுனர் யோ.புரட்சி வழங்கி நிகழ்ச்சியை மெருகு படுத்த அதனைத் தொடர்ந்து
சிறப்பு விருந்தினர் உரையை மருதம் கலை பண்பாட்டு பேரவை நிறுவுனர் யாழ் மருதன் நிகழ்த்தி வைத்தார்.
தொடர்ந்து விருந்தினர்கள் உரை,
கவிஞர் தமிழ்மொழியின் வாழ்த்துக் கவி, R.J கேதிகாவின் பேச்சும் , சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து கவிஞர் சங்கீதாவின் நன்றியுரையுடன் இனிதே
நிகழ்வு நிறைவு பெற்றது.
கருத்துகள்