27 /11/23 மாவீரர் நாள் கவிதை
கருந்திரள் மேகங்கள் ஒன்று சேர
கார்காலக் கார்த்திகையில்
கல்லறைப் பூக்கள் கண் விழிக்க
மூடிய விழிதிறந்து கல்லறை மீதிலே
மெய்யுருகி உம் மேனிதழுவக் காத்திருக்கிறோம்...
நந்திக் கடலும் நடைபயின்ற பாதைகளும் சொல்லிச் சொல்லி மாய்கின்றன.சோடை போன எம்தேசம்
சொந்தம் சொல்லி விம்முகின்றது.
இருண்டு போன ஈழமிங்கே உங்கள்
இருப்பிடம் தேடி நிற்கின்றது.....
உங்களை வரவேற்க நெருப்புப்
பூக்கள் நிறையவே பூத்திருக்கிறது.
நீங்கள் கண்விழிக்க கார்மேகம்
கண்ணீர் சிந்துகின்றது......
கந்தகப் புகையோடு கருகிய மேனிகள்
காணாமல் போகலாம்....
ஈழதேசத்தில் நீர் கொண்ட காதல்
எல்லாம் நீறாகிப் போகுமா?
ஆறாக வழியும் கண்ணீரோடு...
அலைகடல் ஓசையோடு...
எரிதழல் நெஞ்சோடு....
உமைக் காண வந்திருக்கிறோம்.
கல்லறை திறந்து வரியுடை தரித்து
கால்த் தடம் பதிக்க கார்த்திகை
இந் நாளில் கல்லறை மீதெழுந்து வாருங்கள்.கல்லறை மீதெழுந்து
வாருங்கள்....
____ஈழம்.
Jeya Kala |
கருத்துகள்