மாவீரர் தினத்திற்கு கப்பம் கோரியவர் கைது
மாவீரர் நினைவேந்தலுக்கு ரூபா 15 இலட்சத்தை கப்பமாக கோரிய நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் நேற்று முன்னதினம்(26) இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அதிஷ்ட இலாபம் மூலம் கிடைத்த பணம்
கப்பம் கோரியவரின் உறவினரான வாழைச்சேனை காவல்துறை பிரிவிலுள்ள குறுவாக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த மைத்துனனுக்கு 2021 ஆம் ஆண்டு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பின் மூலம் ரூபா பத்து இலட்சம் பணப்பரிசு கிடைத்துள்ளது.
இதனையடுத்து குறித்த நபரிடம் அவரின் மனைவியின் உறவினரான மைத்துனன் முறையான நபர் தான் பாதுகாப்புக்கு இருப்பதாகவும் அதிஷ்டஇலாப சீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கும் பணம் தருமாறு நீண்டகாலமாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
மாவீரர் நினைவேந்தலுக்கு கப்பம்
இந்த நிலையில் கடந்த 26 ஆம் திகதி அதிஷ்டஇலாபச் சீட்டின் மூலம் கிடைத்த பணத்தில் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 லட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளதையடுத்து அவர் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து கப்பம் கோரிய நபர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது கைது செய்யப்பட்ட 41 வயதுடையவரை நேற்று (27) வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தியநிலையில் அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்