மாவீரர் நினைவேந்தலை தடுக்க சிறிலங்கா பாதுகாப்பு தரப்பில் திடீர் கூட்டணி
![மாவீரர் நினைவேந்தலை தடுக்க சிறிலங்கா பாதுகாப்பு தரப்பில் திடீர் கூட்டணி | Sri Lanka S Security Forces Join Maveerar Day மாவீரர் நினைவேந்தலை தடுக்க சிறிலங்கா பாதுகாப்பு தரப்பில் திடீர் கூட்டணி | Sri Lanka S Security Forces Join Maveerar Day](https://cdn.ibcstack.com/article/60165d8b-e91c-4f75-bf9c-35971d74acda/23-6560fe4ad6441.webp)
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா காவல்துறை மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.
மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
மாவீரர் தின நிகழ்வு
தமிழ் மக்களுக்கான ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த மறவர்களை நினைவுகூரும் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழர் தாயகம் எழுச்சிகரமாக தயாராகிவருகின்றது.
குறிப்பாக மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் குழுக்களுடன் இணைந்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.
எனினும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிறிலங்காவின் புலனாய்வு பிரிவினரும் காவல்துறையினரும், நினைந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களையும் அச்சுறுத்தி வருகின்றனர்
இந்த நிலையில், நவம்பர் 27 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிறிலங்காவின் இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்ட நடவடிக்கை
இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு தரப்பு சார்பாக நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் மாவீரர் தினத்தை நினைவுகூரும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை மா அதிபர் (IGP) மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) பணிப்பாளர் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளனர்.
காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் சார்பாக அரச மூத்த சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்