முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 519 யாழ் கோட்டை முன்பாக தியாக தீபம் திலீபன் ஆற்றிய வரலாற்று உரை.

மாவீரர் நினைவேந்தலை தடுக்க சிறிலங்கா பாதுகாப்பு தரப்பில் திடீர் கூட்டணி

மாவீரர் நினைவேந்தலை தடுக்க சிறிலங்கா பாதுகாப்பு தரப்பில் திடீர் கூட்டணி | Sri Lanka S Security Forces Join Maveerar Day
 By Vanan 46 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூர முயற்சிப்பவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா காவல்துறை மா அதிபர் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளனர்.

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

மாவீரர் தின நிகழ்வு

தமிழ் மக்களுக்கான ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த மறவர்களை நினைவுகூரும் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கு தமிழர் தாயகம் எழுச்சிகரமாக தயாராகிவருகின்றது.

நினைவேந்தல் உரிமையில் ரணில் இரட்டைவேடம் : சாடுகிறார் அங்கஜன்

நினைவேந்தல் உரிமையில் ரணில் இரட்டைவேடம் : சாடுகிறார் அங்கஜன்


குறிப்பாக மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் குழுக்களுடன் இணைந்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

எனினும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிறிலங்காவின் புலனாய்வு பிரிவினரும் காவல்துறையினரும், நினைந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களையும் அச்சுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில், நவம்பர் 27 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிறிலங்காவின் இராணுவத்தின் ஓய்வுபெற்ற புலனாய்வு அதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்ட நடவடிக்கை

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு தரப்பு சார்பாக நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களை குறிவைத்த இஸ்ரேலிய துருப்புக்கள்! தீவிரமான போர் மண்டலம்

மக்களை குறிவைத்த இஸ்ரேலிய துருப்புக்கள்! தீவிரமான போர் மண்டலம்

இதன்பிரகாரம் மாவீரர் தினத்தை நினைவுகூரும் நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என  காவல்துறை மா அதிபர் (IGP) மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் (TID) பணிப்பாளர் ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளனர்.

காவல்துறை மா அதிபர் மற்றும் சட்டமா அதிபர் சார்பாக அரச மூத்த சட்டத்தரணி ஷமிந்த விக்ரம இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளனர்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?