முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 548 இந்தியவின் திட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அரசு?


விடுதலைப்புலிகளின் தலைவரது மகளின் காணொளி : சிறி லங்கா படைத்தரப்பு வெளியிட்ட அறிவிப்பு

விடுதலைப்புலிகளின் தலைவரது மகளின் காணொளி : சிறி லங்கா படைத்தரப்பு வெளியிட்ட அறிவிப்பு | A Video From Prabhakaran S Daughter Fake
 By Sumithiran 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

துவாரகாவின் காணொளி தொடர்பில் இலங்கை இராணுவ தரப்பு வெளியிட்டுள்ள தகவல்

 By Dharu 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மகள் துவாரகா தொடர்பில் வெளியான காணொளியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் எனவும், சமூக வலைதளங்களில் வெளியான காணொளி போலியானது என்றும் இலங்கை இராணுவ படை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இது தொடர்பான காணொளி வெளியானதும் உலகம் முழுவதும் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்களிடத்தில் பெருமளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாள் அன்று மாலை வெளியான குறித்த காணொளி , ஏ.ஐ. தொழிநுட்பத்தின்மூலம் வடிவமைக்கப்பட்டது என இலங்கை இராணுவ படையால் கூறப்படுகிறது.

காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு: மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்

காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு: மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்

இலங்கை இராணுவ தகவல்

எனினும், இது தொடர்பான காணொளியை பாதுகாப்பு தரப்பினர் கண்காணித்து வரும் நிலையில், அந்த காணொளியை பார்த்த வடக்கின் சமூக ஊடக ஆர்வலர்கள் பலர் இது ஒரு போலியான விடயம் என கூறியுள்ளனர்.

தனது வாழ்நாளில் அரசியல் ரீதியாக தனது குடும்ப உறுப்பினர்களை எந்த வகையிலும் அவர் ஊக்குவிக்கவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போரின் போது இறந்துவிட்டார்கள் என்றும் இந்தியாவின் அரசியல் ஆதாயத்திற்காக இந்த காணொளி உருவாக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

துவாரகாவின் காணொளி தொடர்பில் இலங்கை இராணுவ தரப்பு வெளியிட்டுள்ள தகவல் | Prabhakaran Daughter Dwaraka Video Viral

உள்நாட்டு போரில் பிரபாகரன் 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார் எனவும், இப்போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.

இந்நிலையில் பிரபாகரன் மகள் துவாரகா பெயரில் காணொளி வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துவாரகாவின் காணொளி தொடர்பில் இலங்கை இராணுவ தரப்பு வெளியிட்டுள்ள தகவல் | Prabhakaran Daughter Dwaraka Video Viral

சமீபகாலமாக ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலமாக மற்றொரு நபர்களை முழுமையாக பிரதி எடுக்கும் விதமான பல்வேறு காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

இதுவும் அத்தகைய ஏ.ஐ காணொளி அல்லது உண்மையானதா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

மட்டக்களப்பில் மாவீரர் நாள் நினைவேந்தலில் ஈடுபட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மட்டக்களப்பில் மாவீரர் நாள் நினைவேந்தலில் ஈடுபட்ட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

சர்ச்சை காணொளி

இது தொடர்பில் இந்திய சைபர் குற்றத்தடுப்பு அதிகாரிகள் கூறுகையில்,

“தற்போதைய செயற்கை நுண்ணறிவின் ‘டீப் ஃபேக்’ தொழில்நுட்பத்தில் நாம் விரும்பும் காணொளிகளை துல்லியமாக உருவாக்க முடியும்.

அவை போலியானவை என்பது கண்டறிவது சற்று கடினமான பணியாகும். இதுபோன்ற காணொளிகள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையாகின.

துவாரகாவின் காணொளி தொடர்பில் இலங்கை இராணுவ தரப்பு வெளியிட்டுள்ள தகவல் | Prabhakaran Daughter Dwaraka Video Viral

அதன்படி தற்போது வெளியான துவாரகா காணொளி விவகாரத்திலும் அவற்றை துறை சார்ந்த நிபுணர்களை கொண்டு ஆராய வேண்டும். இதன்போது மட்டுமே உண்மைநிலை தெரியவரும்” என கூறியுள்ளனர்.

எனினும் இந்த காணொளியை உண்மை எனக்கூறி விரைவில் பிரபாகரன் வெளியே வருவார் என்று தமிழீழ ஆதராவளர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு பிரிவினரும், சில தமிழர் அமைப்புகளும் இதை ஏற்க மறுக்கின்றனர்.

பலரை கலங்க வைத்த விடுதலைப்புலிகளின் மூத்த போராளி ஒருவரின் மகளது அழுகைக்குரல்(Video)

பலரை கலங்க வைத்த விடுதலைப்புலிகளின் மூத்த போராளி ஒருவரின் மகளது அழுகைக்குரல்(Video)


அதேபால், இந்த காணொளியின் உண்மைத்தன்மையை சர்வதேச மற்றும் இந்திய உளவு அமைப்புகள் ஆராய்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் என கூறி கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்ற மாவீரர் தினத்தில் சமூக வலைதளங்களில் வெளியான காணொளி போலியானது என்றும் அந்த காணொளி வேறொரு பெண்ணின் காணொளி என்றும் சிறிலங்கா பாதுகாப்பு படையினர் மற்றும் சமூக வலைதள ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவீரர் நாளன்று மாலை வெளியாகிய அந்த காணொளியில் பிரபாகரனின் மகள் உயிருடன் இருப்பதாகவும் ஏ.ஐ. தொழிநுட்பங்கள் மூலம் தொடர்புகொள்வதாகவும் புலிகள் கூறியுள்ளனர். அத்துடன் அமைப்பு மறுசீரமைக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

போலியானது

எவ்வாறாயினும், இது தொடர்பான காணொளியை பாதுகாப்பு தரப்பினர் ஏற்கனவே கண்காணித்து வரும் நிலையில், அந்த காணொளியை பார்த்த வடக்கின் சமூக ஊடக ஆர்வலர்கள் பலர்,அது போலியானது என தெரிவித்துள்ளனர்.


காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு: மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்

காணொளியில் தோன்றிய துவாரகாவின் முக அசைவு: மொழிநடையில் நிபுணர்கள் சந்தேகம்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?