அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படைகள் புகுந்தது ஏன்..! பிரதமர் நெதன்யாகு விளக்கம்

By Sumithiran 3 மணி நேரம் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)
காசாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட பணயக்கைதிகள் இருந்ததற்கான "வலுவான அறிகுறிகள்" இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
"நாங்கள் மருத்துவமனைக்குள் நுழைந்ததற்கு இதுவும் ஒரு காரணம்" என்று அவர் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அல்-ஷிஃபாவின் கீழ் ஹமாஸ் ஒரு பெரிய தளத்தை அமைத்திருப்பதாக இஸ்ரேல் பலமுறை குற்றம் சாட்டியது.ஆனால் அதை ஹமாஸ் மறுக்கிறது.
படைகள் புதன்கிழமை மருத்துவமனைக்குள் நுழைந்தன, ஆனால் அவர்கள் அங்கு சென்றபோது, பணயக்கைதிகள் அங்கு இல்லை என்று நெதன்யாகு கூறுகிறார்.
"அவர்கள் [அங்கே] இருந்திருந்தால், அவர்கள் வெளியே எடுக்கப்பட்டிருப்பர்," என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் தனது அரசாங்கத்திற்கு "பணயக்கைதிகள் பற்றிய புலனாய்வு" தகவல்கள் கிடைத்ததாக தெரிவித்தார்., ஆனால் "நான் அதைப் பற்றி குறைவாகச் சொன்னால் நல்லது" என்று மேலும் குறிப்பிட்டார்.
கருத்துகள்