முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 527 மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு : ஏற்பாடு செய்தவர் 'பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்' கைது

 

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு : ஏற்பாடு செய்தவர் 'பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ்' கைது

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு : ஏற்பாடு செய்தவர்
 By Vanan 7 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு 

மட்டக்களப்பு வெல்லாவெளியில் ஜனநாயக் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு  காவல்துறையினரால் இடைநிறுத்தப்பட்டது.


மட்டக்களப்பு வெல்லாவெளியில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வொன்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் மற்றும் மாவட்ட ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அங்கு சென்ற வெல்லாவெளி காவல் நிலையப் பொறுப்பதிகாரி கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸிடம் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தினூடாகப் பெறப்பட்ட தடையுத்தரவினை வழங்கி நிகழ்வை உடன் நிறுத்துமாறு தெரிவித்திருந்தார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு : இன்றும் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு : இன்றும் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

இதனையடுத்து ஜனாநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸை வாக்குமூலம் பெறுவதற்காக வெல்லாவெளிப் காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில் அவர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு : ஏற்பாடு செய்தவர்

இந்த நிவையில், இவரின் இந்தக் கைதானது முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் செயற்பாடு என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?