முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 493 மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க விண்ணப்பங்கள்: சுமந்திரனின் சட்டவாதத்தையடுத்து நிராகரிப்பு

 

மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க விண்ணப்பங்கள்: சுமந்திரனின் சட்டவாதத்தையடுத்து நிராகரிப்பு

மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க விண்ணப்பங்கள்: சுமந்திரனின் சட்டவாதத்தையடுத்து நிராகரிப்பு | Court Refuses To Ban Maaveerar Thinam
 By Rakesh 6 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

மட்டக்களப்பில் மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்குமாறு சமர்ப்பித்த விண்ணப்பங்களை, சுமந்திரனின் சட்டவாதத்தையடுத்து நீதிமன்றம் இன்று (17.11.2023) நிராகரித்துக் கட்டளை வழங்கியுள்ளது.

அந்நிகழ்வுக்கு தடை விதிக்கவும், அந்நிகழ்வுகளில் பங்குபற்றக் கூடாது என முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரமுகர்களுக்குத் தடை உத்தரவு வழங்கவும், கோரிக்கை விடுத்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில், மட்டக்களப்பு மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்விண்ணப்பங்கள் இன்று நீதிமன்றத்தால் நிராகரித்துக் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

31 வருடமாக தென்னாபிரிக்காவை துரத்தும் துரதிஷ்டம்! கண்ணீர் சிந்தியும் ஏன் கனவு கைகூடவில்லை..

31 வருடமாக தென்னாபிரிக்காவை துரத்தும் துரதிஷ்டம்! கண்ணீர் சிந்தியும் ஏன் கனவு கைகூடவில்லை..


முன்னிலையான சுமந்திரன்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மேற்படி பிரமுகர்கள் அனைவர் சார்பிலும் மட்டக்களப்பு சட்டத்தரணிகளில் பெரும் எண்ணிக்கையானோரின் அனுசரணையுடன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி நடத்திய நீண்ட சட்டவாதத்தை அடுத்தே இந்த நிராகரிப்புக் கட்டளையை நீதவான் வழங்கியுள்ளார். 

மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க விண்ணப்பங்கள்: சுமந்திரனின் சட்டவாதத்தையடுத்து நிராகரிப்பு | Court Refuses To Ban Maaveerar Thinam

"உயிரிழந்த ஒருவருக்காக நினைவேந்தும் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. அது அடிப்படை உரிமையும் கூட. அதை மறுக்கும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் துணை போகக்கூடாது.

மாறாக, அந்த உரிமை நிலை நாட்டப்படுவதை நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்'' என்று சாரப்பட, நீண்ட சட்டவாதத்தை சுமந்திரன் நிகழ்த்தினார்.

மாவீரர் நினைவேந்தல் தடை கோரல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

மாவீரர் நினைவேந்தல் தடை கோரல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்


நீதவான் கட்டளை

அதையடுத்து பொலிஸாரின் விண்ணப்பங்களை நிராகரிக்கும் கட்டளையை நீதவான் வழங்கினார்.

மாவீரர் நினைவேந்தல்களுக்கு தடை விதிக்க விண்ணப்பங்கள்: சுமந்திரனின் சட்டவாதத்தையடுத்து நிராகரிப்பு | Court Refuses To Ban Maaveerar Thinam

வேறு ஒரு வழக்குக்காக மட்டக்களப்பு நீதிமன்றத்தில் சுமந்திரன் பிரசன்னமாகி இருந்த தருணத்திலேயே பொலிஸாரின் இந்த விண்ணப்பங்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

விடயத்தை அவதானித்த ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், தானாக எழுந்து தடை விதிக்கக் கோரப்பட்ட பிரமுகர்கள் சார்பில் தாம் முன்னிலையாகி பதில் வாதம் செய்ய விரும்புகின்றார் என விண்ணப்பம் செய்தார்.

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள்! வியக்க வைக்கும் முன்னாள் போராளியின் மகனது சாதனை (Photos)

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள்! வியக்க வைக்கும் முன்னாள் போராளியின் மகனது சாதனை (Photos)


தமிழ்ச் சட்டத்தரணிகள் ஆதரவு

அச்சமயம் மன்றில் பிரசன்னமாகியிருந்த பெரும் எண்ணிக்கையான தமிழ் சட்டத்தரணிகள் தாங்களும் சுமந்திரனுக்கு அனுசரணையாகப் பிரசன்னமாகின்றனர் எனப் பதிவு செய்தனர்.


மட்டக்களப்பு பொலிஸாரின் விண்ணப்பம் முதலில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதையடுத்து கொக்கட்டிசோலை பொலிஸாரின் விண்ணப்பம் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னைய வழக்கின் காரணங்களின் அடிப்படையில் இந்த விண்ணப்பமும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 129 இப்படியான அறிக்கை வந்தால் சீனா காப்பல் இலங்கையில் நிக்கின்றது என்பது அதின் பொருள் அறிக்கை வரவில்லை என்றால் இலங்கைக்குப் கப்பல்போகவில்லை ஆனால் இத்திய அமைதியாக இருக்கிறது என்பது அதின் பொருள்?

  துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!! விலை போபவர்களின் தொகை அதிகரிப்பு,  By Gokulan  2 மணி நேரம் முன்             0 SHARES விளம்பரம் அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்கைகள் புலம்பெயர் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி வருவகின்றன. குறிப்பாக தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி அந்தப் போலி அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்கள் மத்தியில் உலாவ விடப்பட்டு வருகின்றன. ஊடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அந்த அறிக்கைகளில் இடப்பட்டுள்ள கையொப்பங்களுக்கு உரியவர்களை உறுதிப்படுத்தத் தொடர்புகொண்டபோதுதான் அந்த அறிக்கைகள் அனைத்தும் போலியானவை என்று தெரியவந்தது. புலம்பெயர் தமிழ் மக்களை ஒரு குழப்பநிலைக்குள் வைத்திருக்கும் நோக்கத்துடனும், ஒரு முக்கியஸ்தர்களினது இருப்புத் தொடர்பான ஒரு போலி பிம்பத்தைக் கட்டமைக்கும் நோக்கத்துடனும், புலம்பெயர் மக்களைக் குறிவைத்து ஒரு சதி நகர்வொன்றை மேற்கொள்ளும் ந

d 512 என் குலதெய்வம் நலமுடன் இருக்கிறாராம்..ஐயா நெடுமாறன். உண்மையா??

ஜீவன் சொல்வதில் நூறு வீதம் உன்மை விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என முத்தரசன் கூறியுள்ளார். ஈரோடு, ஈரோட்டில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், விடுதலைப்புலிகளின் தலைவர் உயிருடன் இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! | Doubly Happy If The Ltte Leader Is Alive விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ.நெடுமாறன் ஆதாரம் இல்லாமல் சொல்லமாட்டார். அவர் கூறுவது போல் பிரபாகரன் உயிருடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சி. பிரபாகரன் உயிருடன் இருந்தால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரட்டிப்பு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது என அவர் குறிபிட்டார்.

e 499 உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன்

ராதா வான்காப்புப்படைபணி போராளி இளங்குட்டுவன் அழைப்பு  உன்மையை சொல்ல முன் வந்த விலை போகத போராளி இளங்குட்டுவன் தலைவனின் படை பணியில் இருந்து இறுதிவரை கடமையாற்றிய போராளிதான் இவன் இறுதிவரைக் களமாடி பின் காட்டிகொடுக்கப்பட்டு எதிரியின் ஜெயில் வாழ்க்கை அவர்களின் கொடிய சித்திரவதைகளைத்தாங்கிக்கொண்டு எதிரியின் கொடிய எதிர்பார்ப்பை அறிந்து வெளியே வந்தவன் , எதிரியின் மூழைச் செலவிற்கு உட்பட்டு மறைப்பில் இருந்த பொருட்களைக் காட்டிக்கொடுக்கவோ அல்லது தன்னோடு இருந்த சக நன்பர்களைக்காட்டித்தருவேன் என எதிரிக்குத் துணை போகாதவன், பிறந்த மனிதன் எப்போ ஒரு நாள் சாவான் என்ற தத்துவ வார்த்தையை அறிந்தவன், அதனால்தான் பொய்யைக் கண்டு பொங்கி எழுந்தவன், புலி என்று தன்னை  அடையாழப்படுத்துபவர்கள் எதிரியை வேட்டையாடுவதற்குத் துணிந்தவர்களாகவும் அவனின் வேட்டையில் இருந்துதப்பத் தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும், அந்தக் குறிப்பிட்ட கொழ்கையில் இருப்பவர்களில் இவனும் ஒருதன்,