முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 415 கிழக்கு மாகாணத்த்தில் பெரும் கொள்ளைக் கும்பல் கைது

கிழக்கு மாகாணத்தை அதிர வைத்த இளம் யுவதி! தலைமறைவான யாழ் நபர்; பொலிஸார் திடுக்கிடும் தகவல் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பாரியளவிலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அழகுக்கலை நிபுணரான இளம் யுவதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன் இந்த கொள்ளை சம்பவ்க்கள் தொடர்பில் யுவதி உட்பட ஐந்து பேரை களுவாஞ்சிகுடி பொலிஸார் நேற்று (20) கைது செய்துள்ளனர். கிழக்கு மாகாணத்தை அதிர வைத்த இளம் யுவதி! தலைமறைவான யாழ் நபர்; பொலிஸார் திடுக்கிடும் தகவல் | The Young Woman Who Rocked The Eastern Province இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்ட நிலையில் , கடந்த 16 ஆம் திகதி மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பகுதியில் வைத்து பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேகநபரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் 2 ஆண்கள், ஒரு யுவதியை கைது செய்தனர். சந்தேக நபர்கள் விபரம் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் மட்டக்களப்பு மாவட்டத்தை வசிப்பிடமாகவும், தற்போது கொச்சிக்கடை பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார். இரண்டாவது மற்றும் மூன்றாவது

d 414 தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில் நடந்தது என்ன

தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில் நடந்தது என்ன - சுமந்திரன் வெளியிட்ட தகவல் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தேசிய கட்சிகளுடனான சந்திப்பில் கூறியுள்ளார். அத்துடன் மாகாண சபைத் தேர்தலை முன் கூட்டியே நடத்துமாறும் கோரியுள்ளார். அதேநேரம், அதிபருக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பிலும் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தெளிவு படுத்தியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஐ.பி.சி. தமிழுக்கு கூறினார். தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில் நடந்தது என்ன - சுமந்திரன் வெளியிட்ட தகவல் | Jaishankar S Meet Tamil National Parties Today மீண்டும் நாடு திரும்பினார் இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலமும் கலந்து கொண்டிருந்தார். இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது பயணத்தை நி

d 413 சிவில் நிர்வாகத்தை நடத்த முடியாத நிலையில சிங்களக்கைக்கூலிகள்,

நுவரெலியாவை உலுக்கிய பயங்கர விபத்து: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு நுவரெலியாவில், நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பஸ் ஒன்றும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது. குறித்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (20-01-2023) இடம்பெற்றுள்ளது. நுவரெலியாவை உலுக்கிய பயங்கர விபத்து: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Nuwara Eliya Accident 7 People Lost Their Lives இந்த விபத்தில் வானில் பயணித்தவர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, நுவரெலியாவை உலுக்கிய பயங்கர விபத்து: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | Nuwara Eliya Accident 7 People Lost Their Lives ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற வான் ஒன்றை கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களை சுற்றுலாவுக்கு ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதியதிலலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதில் பஸ்ஸில் பயணித்த 47 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த பஸ் சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது என்றும், அங்கு இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள ம

d 412 தமிழர்கள் ஏமாறுவது தொடர்கதையாக மாறிவிட்டது,

திருமணத்திற்காக பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் யுவதிக்கு நேர்ந்த துயரம்! பிரான்ஸில் விசா இல்லாத இளைஞனைத் திருமணம் செய்வதற்காக போலி விசா மூலம் பயணித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி விமான நிலைய குற்ற புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. போலி போலந்து வீசாக்களுடன் தோஹா கட்டார் ஊடாக சட்டவிரோதமாக போலந்து செல்ல முயன்ற நான்கு பேர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதாகினர். திருமணத்திற்காக பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் யுவதிக்கு நேர்ந்த துயரம்! | Jaffna Woman Arrest Airport Tried France மணப்பெண்ணுக்கு போலி விசா இவர்களில் யாழ் இளம் யுவதியொருவரும் கைதாகியுள்ளார். கைது செய்யப்பட்ட 23 வயதான யுவதி, பிரான்ஸ் இளைஞரை திருமணம் செய்ய சென்றது தெரிய வந்துள்ளது. விசா இல்லாத பிரான்ஸ் இளைஞன், இலங்கை வர முடியாத நிலையில், மணப்பெண்ணை போலி விசா ஊடாக போலந்திற்கு அழைத்து, பிரான்சிற்கு கூட்டிச் செல்ல திட்டமிட்டது யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது. அத்துடன் கைதான ஏனைய மூவரும் வேலைவாய்ப்பிற்காக பயணித்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. திருமணத்திற்காக பி

d 411 ஒரு சிறு கருத்துக்கூட தவறாமல் புத்திசாலியாகக் கதைக்கும் ரணில்,

இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சபாநாயகர், அமைச்சர்கள், நசீட் அஹமத், அலி சப்ரி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில், மேலும் உரை நிகழ்த்துகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது, தமிழ் கட்சிகளுடன் இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுகிறேன். ஆனால், அது மாத்திரம் போதாது. நான் இப்படி கூறும்போது, இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ள திரு. மனோ கணேசன் என்னை உற்று நோக்குகிறார். வடக்கு கிழக்கு கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என நான் அவருக்கு உறுதி கூற விரும்புகிறேன். முஸ்லிம் கட்சி

d 410 தனிநாடு வைத்துயிருப்பவர்களிற்கு மேலதிகமான ஆசைகளையும் தான் நிறைவேற்றப்போவதாக புடின் தெரிவித்தார்,

உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்தார். அதை எதிர்த்து ரஸ்யா போரை தொடங்கியது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஸ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றன. இந்தப் போர் இன்னனும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அமெரிக்கா - பிரிட்டன் ஆதரவு உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி | Putin Warns Nuclear War If Russia Defeated Ukraine உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்து ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. ரஸ்யா படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த டிசம்பர் 21ம் திகதி அமெரிக்கா சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பிடனைச் சந்தித்து, உக்ரைனுக்கு அதிக ஆயுதம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து உக்ரைனுக்கு 3 பில்லிய

d 409 ரணிலின் நரிதந்திரம் அம்பலம்,

ரணிலுக்கு எதிராகப் போராடியவர்களை கைது செய்யும் படலம் யாழில் ஆரம்பம்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய தைப்பொங்கல் விழாவுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் – நல்லூருக்கு வந்தபோது அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் நேற்று மாலை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் பலரை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு கொழும்பிலிருந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமாக அறியமுடிகின்றது. ‘சட்டவிரோதமாகக் கூட்டம் நடத்தியமை, ஜனாதிபதிக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டியமை, பொலிஸார் பேரணியைத் தடுத்தபோது அவர்களுக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸாருக்கு காயம் விளைவித்தமை’ போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நேற்று மாலை கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றிரவு முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜன