பிறந்த குழந்தையை கைவிட்டு சென்ற பெண் கைது பிறந்த குழந்தையை பண்டாரகொஸ்வத்தை பிரதேசத்தில் குளத்திற்கு அருகில் மைதானத்தில் கைவிட்டுச் சென்ற பெண்ணை இன்று காலை கைது செய்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு அம்பியூலன்ஸ் வண்டியில் குழந்தையை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிறந்த குழந்தையை கைவிட்டு சென்ற பெண் கைது | Woman Arrested For Abandoning Newborn Baby பெண்ணொருவர் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்ற போது குழந்தையின் அழு சத்தம் கேட்டுள்ளது. அப்போது தேடிப்பார்த்ததில் உர பைக்குள் போடப்பட்டிருந்த குழந்தையை அந்த பெண் மீட்டுள்ளார். இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து பொலிஸாருக்கு அறிவித்து அம்பியூலன்ஸ் வண்டியை வரவழைத்து குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********