ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்சென்ற இலங்கையர்கள் பலர் கைது ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்குடன் ஹங்கேரி எல்லையூடாக தப்பிச்சென்ற 37 இலங்கையர்கள் உட்பட்ட 70க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருட்களை ஏற்றச்சென்ற மூன்று லொறிகளில் மறைந்து பயணித்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவது சம்பவத்தில், இத்தாலிக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற லொறியில் இருந்து 35 பேர் கைதுசெய்யப்பட்டனர். துருக்கியர்கள் கைது அதேநேரம் போலந்துக்கு குளிர்சாதனப் பெட்டிகளை ஏற்றிச்சென்ற இரண்டாவது லொறியில் மறைந்திருந்த நிலையில் 20 துருக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது லொறி வாகன உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு இத்தாலிக்கு பயணித்த நிலையில் அதில் இருந்து 15 பங்களாதேஸ் மற்றும் எத்தியோப்பியர்கள் கைது செய்யப்பட்டனர். ருமேனியா எல்லைப்படையினர், மோப்ப நாய்களின் உதவியுடனேயே எல்லைக்கடந்து சென்ற இலங்கையர்களையும் ஏனையோரையும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********