தகாத உறவு... வீடொன்றில் சடலமாக மீட்கபட்ட ஆண் - பெண்! வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்
![தகாத உறவு... வீடொன்றில் சடலமாக மீட்கபட்ட ஆண் - பெண்! வெளியான பல அதிர்ச்சி தகவல்கள் | Nuwara Eliya Man And Woman Found Dead In A House தகாத உறவு... வீடொன்றில் சடலமாக மீட்கபட்ட ஆண் - பெண்! வெளியான பல அதிர்ச்சி தகவல்கள் | Nuwara Eliya Man And Woman Found Dead In A House](https://cdn.ibcstack.com/article/f83fa2fe-ce9e-46b2-9a76-66e22b71a62b/24-66113daf15d91.webp)
உடப்புஸ்ஸலாவ - மடுல்ல, பாஹலகம பகுதியில் வீடொன்றில் இருந்து ஆண் - பெண் என இருவரின் சடலங்கள் இன்றைதினம் (06-4-2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயும், திருமணமாகாத 39 வயதுடைய ஆணொருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் உடப்புஸ்ஸலாவ பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ள தாய், உயிரிழந்த திருமணமாகாத ஆண் , ஆகிய இருவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இருவருக்கும் இடையில் இருந்து வந்த தகாத உறவு பெண்ணின் கணவருக்குத் தெரியவந்ததையடுத்து நேற்றுமுன்தினம் மாலை தாக்குதல் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து மேற்படி பெண் தனது வீட்டை விட்டு தகாத உறவைப் பேணி வந்த நபருடன் சென்றுள்ள நிலையில், இருவரும் வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வலப்பனை நீதிவான் வருகை தந்து சடலங்களைப் பார்வையிட்டு மரண விசாரணை நடத்தினார்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா போன்ற கோணங்களில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்