முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

TAMIL Eelam news b686

யாழ்.கோண்டாவில் பகுதியில் வன்முறை கும்பல் அட்டூழியம் (PHOTOS) யாழ். கோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்துக்கு அண்மையாக உள்ள வர்த்தகரொருவரின் வீட்டு வளாகத்துக்குள் புகுந்த கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. குறித்த கும்பல் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று உப்புமடச் சந்தியில் வைத்து சேதப்படுத்தி விட்டுச்சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஓட்டோவில் வந்த வன்முறைக் கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் சந்தியில் அலைபேசி வர்த்தக நிலையத்தை நடத்தி வருபவரின் வீட்டிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

TAMIL Eelam news b685

மாவீரர் நாள் கொண்டாடியதால் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்ட நபர் சிங்கப்பூரில் மாவீரர் நாள் கொண்டாடியதுடன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அட்டைப்படம் பொறிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் அடையாள அட்டையை வைத்திருந்த நபர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எடையூர் சிவராமன் நகரை சேர்ந்தவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் எடையூர் கடைவீதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் குமரேசன் (வயது 25). இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் இணையதளம் மூலம் நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து உள்ளார். இந்த நிலையில் குமரேசன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மாவீரர் நாளும் அவர் கொண்டியிருக்கின்றார். இக்காரணங்களுக்காக அவர் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். சிங்கப்பூரில், தமிழர்கள் சிலர் மாவீரர் நாள் விழாக் கொண்டாட்ட புகைப

TAMIL Eelam news b684

பெர்த்தில் இரு பிள்ளைகளைக் கொன்ற தாயார் குற்றமற்றவர் என தீர்ப்பு! பெர்த்தில் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்த தாயார் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருந்தபோதே அவர் இக்கொலைகளைச் செய்துள்ளதால், குறித்த 40 வயது தாயார் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்படுவதாக மேற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெர்த்தின் வடக்குப் பகுதியிலுள்ள வீட்டில் வசித்துவந்த Milka Djurasovic என்ற பெண், தனது 10 வயது மற்றும் 6 வயது மகள்களை கொலைசெய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார். வீட்டிலிருந்து வெளியேற முன்னர் வீடியோ ஒன்றைப் பதிவுசெய்த Milka Djurasovic, இச்சம்பவத்தையிட்டு தான் வருந்துவதாகவும் தனது வாழ்க்கையையும் முடித்துக்கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார். சம்பவம் இடம்பெற்று இரு மணி நேரங்களின் பின்னர் வாகன தரிப்பிடமொன்றில் வைத்து காயங்களுடன் மீட்கப்பட்ட Milka Djurasovic மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு வழக்கு விசாரணை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் Mi

TAMIL Eelam news b683

யாழில் பாரிய திருட்டு சம்பவம்: திருடனை கையும் மெய்யுமாக மடக்கிப் பிடித்த மக்கள் யாழ்.நல்லூரடியில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கையும் மெய்யுமாக சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழில் திருடிய தொலைபேசியின் ‘லொக் உடைக்க’ யாழ்.நகரிலுள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றிற்கு சென்ற போதே இவ்வாறு சிக்கியுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அண்மையில் யாழ்.நல்லூரடியிலுள்ள வீடொன்றிலிருந்து யன்னல் வழி ஊடாக சுமார் 75,000ரூபா பெறுமதியுள்ள தொலைபேசி ஒன்று திருப்பட்டிருந்தது. இதேவேளை, திருடிய தொலைபேசியை, யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பழைய தபால் நிலைய வீதியிலுள்ள தொலைபேசி திருத்தும் நிலையமொன்றில், ‘லொக் உடைத்து’ தருமாறு கொடுத்துள்ளார். குறிப்பிட்ட நேரம் கழித்து வருமாறு கடைக்காரர் அனுப்பி வைத்துள்ளனர். பிறகு தொலைபேசி திருடப்பட்டதை அறிந்து, தொலைப்பேசியின் உரிமையாளரான இளைஞன், அதன் இருப்பிடத்தை இணையத்தின் ஊடாக கண்டறிந்து, குறிப்பிட்ட கடைக்கு சென்றுள்ளார். இருப்பிடத்தில் காண்பிக்கப்படும் விபரத்தை சுட்டிக்காட்டி, அந்த கடையில் தமது தொலைபேசி இருக்கும

TAMIL Eelam news b682

முல்லைத்தீவு சிறுமி கொலைக்கு காரணம் தாயாரா? திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்! கொழும்புக்கு சென்ற மாதிரிகள் முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது. சிறுமி கொலை தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு மேலதிகமாக மேலும் நால்வரை தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த வாரம் 15 ஆம் திகதி காணாமற்போன நிதர்சனா, கொலை செய்யப்பட் நிலையில் 18 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார். தனது வீட்டிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போனதாக குடும்பத்தினர் ஆரம்பத்தில் கூறியிருந்தனர். ஆனால் இந்தக் கதைகள் எல்லாம் சோடிக்கப்பட்டவை என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நிதர்சனா அக்காவின் கணவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர். கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசாரணைகளின் போது சிறுமியின் கொலை தொடர்

TAMIL Eelam news b681

பெண்கள் மீதான தாக்குதல் சாத்தானுக்கு சமமானது- போப் பிரான்சிஸ் பெண்கள் தைரியமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். மீண்டு வரவேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறினார். போப் ஆண்டவர் பிரான்சிஸ் இத்தாலி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 4 பேருடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் போப் ஆண்டவரிடம் தங்களது பிரச்சினைகள் பற்றி பேசி ஆலோசனைகளை கேட்டனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட இத்தாலி பெண் ஜியோவானா என்ப வர் தனது நிலை பற்றி கூறினார். இதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் பதில் அளித்து பேசியதாவது:- பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. தங்களது கணவர்களால் கூட வீடுகளில் பெண்கள் தாக்கப்படும், துஷ்பிரயோகம் செய்யப்படும் எண்ணிக்கை மிக மிக அதிகம். இது எனது பார்வையில் கிட்டத்தட்ட சாத்தானியமானது. ஏன் என்றால் அது தங்களை தற்காத்துக்கொள்ள முடியாதவர்களின் பலவீனத்தை பயன்படுத்துகிறது. இது மிகவும் அவமானகரமானது. மேரி மாதா பல இன்னல்களை சந்தித்தார். ஆனால் அவர் தனது கண்ணியத்தை எப்போதும் இழக்கவில்லை. நான் உங்களிடம் (பெண்கள்) நிறைய கண்ணியத்தை பா

TAMIL Eelam news b680

பாலியல் தொளிலை அடக்க முடியாமல் திண்டாடும் சிங்கள வெறியர்கள் சிறுமியை சீரழித்து உல்லாசத்தில் மிதந்த உறவுக்கார பெண்; பொறிவைத்து பிடித்த பொலிஸார் 14 வயதான சிறுமியை நீண்ட நாட்களாக, தகாத முறையில் ஈடுபடுத்தி , அதில் கிடைக்கும் பணத்தில் சுகபோகமான வாழ்க்கையை நடத்திவந்த, சிறுமியின் உறவுக்கார பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை பொலிஸாருக்கு கிடைத்த மிக இரகசியமான தகவலை அடுத்தே, உறவுக்காரப் பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோரை ஏமாற்றி, தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்த சந்தேக நபரான உறவுக்கார பெண், அச்சிறுமியை பலருக்கும் பணத்துக்கு விற்றுள்ளார். மருதானை பிரதேசத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று, தான் தனியாக இருப்பதால், துணைக்கு சிறுமியை அழைத்துச் செல்வதாகக் கூறி, சிறுமியை கிராண்பாஸ் பகுதிக்கு அழைத்துச் சென்று தகாத தொழிலுக்கு விற்றுள்ளார். இரண்டு, மூன்று நாட்கள் தன்னுடைய வீட்டில் தங்க வைத்துக்கொள்வதாக, அச்சிறுமியின் பெற்றோரிடம் கூறிவிட்டு அழைத்துவரும் அப்பெண், சிறுமியை பல்வேறான வர்த்தகர்களுக்க