முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b684

பெர்த்தில் இரு பிள்ளைகளைக் கொன்ற தாயார் குற்றமற்றவர் என தீர்ப்பு!
பெர்த்தில் தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்த தாயார் குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருந்தபோதே அவர் இக்கொலைகளைச் செய்துள்ளதால், குறித்த 40 வயது தாயார் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்படுவதாக மேற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெர்த்தின் வடக்குப் பகுதியிலுள்ள வீட்டில் வசித்துவந்த Milka Djurasovic என்ற பெண், தனது 10 வயது மற்றும் 6 வயது மகள்களை கொலைசெய்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறியிருந்தார். வீட்டிலிருந்து வெளியேற முன்னர் வீடியோ ஒன்றைப் பதிவுசெய்த Milka Djurasovic, இச்சம்பவத்தையிட்டு தான் வருந்துவதாகவும் தனது வாழ்க்கையையும் முடித்துக்கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார். சம்பவம் இடம்பெற்று இரு மணி நேரங்களின் பின்னர் வாகன தரிப்பிடமொன்றில் வைத்து காயங்களுடன் மீட்கப்பட்ட Milka Djurasovic மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு வழக்கு விசாரணை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் Milka Djurasovic-ஐ குற்றவாளியாக கருத முடியவில்லை எனவும், மனநல கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைசெய்ய முயன்றபோதும் அது கைகூடவில்லை எனவும் விசாரணைகளின் முடிவில் நீதிபதி Stephen Hall தெரிவித்தார். மனநல சிகிச்சைபெற்றுவரும் Milka Djurasovic முழுமையாக குணமடையும்வரை காலவரையறையற்ற தடுப்புக்காவலில் வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?