முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b683

யாழில் பாரிய திருட்டு சம்பவம்: திருடனை கையும் மெய்யுமாக மடக்கிப் பிடித்த மக்கள்
யாழ்.நல்லூரடியில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் கையும் மெய்யுமாக சிக்கிக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழில் திருடிய தொலைபேசியின் ‘லொக் உடைக்க’ யாழ்.நகரிலுள்ள தொலைபேசி திருத்தும் கடை ஒன்றிற்கு சென்ற போதே இவ்வாறு சிக்கியுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அண்மையில் யாழ்.நல்லூரடியிலுள்ள வீடொன்றிலிருந்து யன்னல் வழி ஊடாக சுமார் 75,000ரூபா பெறுமதியுள்ள தொலைபேசி ஒன்று திருப்பட்டிருந்தது. இதேவேளை, திருடிய தொலைபேசியை, யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள பழைய தபால் நிலைய வீதியிலுள்ள தொலைபேசி திருத்தும் நிலையமொன்றில், ‘லொக் உடைத்து’ தருமாறு கொடுத்துள்ளார். குறிப்பிட்ட நேரம் கழித்து வருமாறு கடைக்காரர் அனுப்பி வைத்துள்ளனர். பிறகு தொலைபேசி திருடப்பட்டதை அறிந்து, தொலைப்பேசியின் உரிமையாளரான இளைஞன், அதன் இருப்பிடத்தை இணையத்தின் ஊடாக கண்டறிந்து, குறிப்பிட்ட கடைக்கு சென்றுள்ளார். இருப்பிடத்தில் காண்பிக்கப்படும் விபரத்தை சுட்டிக்காட்டி, அந்த கடையில் தமது தொலைபேசி இருக்கும் விடயத்தை தெரிவித்தனர். மேலும், அந்த இளைஞன் கொடுத்த கடவுச்சொல்லின் மூலம் தொலைபேசி வழமைக்கு திரும்பியது. இதனால், அவர்தான் உண்மையான உரிமையாளர் என்பது தெரிய வந்தது. தொலைபேசி உரிமையாளராக இளைஞன், பொலிஸாருக்கும் அறிவித்துள்ளார். அத்துடன், அவரும் நண்பர்களும் தொலைபேசியை மீள பெற வரும் திருடனை மடக்கிப் பிடிக்க, அந்த பகுதியில் நின்றிருந்தனர். சற்று நேரம் கழித்து, திருடன் தொலைபேசியை பெற அங்கு வந்துள்ளார். அவரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடிக்க, பொலிசாரும் சம்பவ இடத்திற்கு வந்து, திருடனை கைது செய்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?