வவுனியாவில் பயங்கர விபத்து: தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோக சம்பவம்!
![வவுனியாவில் பயங்கர விபத்து: தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோக சம்பவம்! | Vavuniya Accident Tamils Family Man Death வவுனியாவில் பயங்கர விபத்து: தமிழ் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோக சம்பவம்! | Vavuniya Accident Tamils Family Man Death](https://cdn.ibcstack.com/article/651bbd29-5a31-4304-b68f-217f63fb1182/23-650db381ae7e4.webp)
Sri Lanka PoliceSri Lankan TamilsVavuniya
27 நிமிடங்கள் முன்
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********B31 கரும்புலிகள்
வவுனியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் ஏ9 வீதி, பறண்நட்டகல் சந்தியில் இன்றையதினம் (22-09-2023) இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஓமந்தையில் வெதுப்பம் நடத்தி வரும் சிவசேகரம் தினேசன் என்பவர் இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வவுனியாவில் இருந்து ஓமந்தைக்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, பறண்நட்டகல் சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த பட்டா ரக வாகனம் ஒன்று மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற சிவசேகரம் தினேசன் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், அவரது சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்