45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது
![45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது | 45 Women Raped In Pakistan Principal Arrest 45 பெண்கள் பாலியல் வன்புணர்வு:பாடசாலை அதிபர் கைது | 45 Women Raped In Pakistan Principal Arrest](https://cdn.ibcstack.com/article/c047caa6-2a6b-4bc1-8bfa-106236f69e6f/23-65023114ea6dd.webp)
By Sumithiran 5 மணி நேரம் முன்
பாகிஸ்தானில் 45 பெண்களை பாடசாலை அதிபர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் என தெரிவித்து இரண்டு பெண்கள் சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் கராச்சி குல்ஷான்-இ-ஹதீத் நகரில் உள்ள தனியார் பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
கைதான பாடசாலை அதிபர், நீதிபதி ரம்ஷா நவைத் முன் முற்படுத்தப்பட்ட நிலையில் மேற்படி இரண்டு பெண்களும் சாட்சியம் அளித்தனர்.
வேலை தருகிறேன் என தெரிவித்து பாடசாலைக்கு பெண்களை அழைக்கும் அதிபர், கட்டாயப்படுத்தி அவர்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குறித்த இரண்டு பெண்களும் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர்.
பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு
குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்