முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 251 தமிழீழப்பகுதியில் சிங்களக்கைக்கூலிகளின் அட்டகாசம் கூடியமையால் இலங்கை செல்வதை சிறிது காலம் தவிர்க்கவும்

 

கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்: வெளிநாட்டு பிரஜையின் வீட்டுக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்!

கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்: வெளிநாட்டு பிரஜையின் வீட்டுக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்! | Gang Attacked Foreign National In Kilinochchi
 By Shankar 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

கிளிநொச்சியில் உள்ள வெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் புகுந்து இனம் தெரியாத குழு ஒன்று சரமாரி தாக்குதல் நடத்தியதில் 5 காமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் (26-09-2023) நள்ளிரவு கிளிநொச்சி திருவையாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது.


குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு சிறு கொடுக்கல் வாங்கலே காரணமாக அமைந்துள்ளது.

வெளிநாட்டு பிரஜையின் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை குறித்த குழு தாக்கியுள்ளது.

சம்பவத்தை அவதானித்த தாக்குதலுக்குள்ளான வீட்டாரில் ஒருவர் தனது நண்பன் தாக்கப்படுவதாக தெரிவித்து அப்பகுதிக்கு சென்றுள்ளார்.

கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்: வெளிநாட்டு பிரஜையின் வீட்டுக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்! | Gang Attacked Foreign National In Kilinochchi

இதேவேளை குறித்த இளைஞனின் கால் பகுதியில் தாக்குதல் மேற்கொண்ட குழுவினர் கூறிய ஆதங்களினால் தாக்கியதாகவும் தடுத்த பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தை தொடர்ந்து, நேற்று நள்ளிரவு 20க்கு அதிகமானோர் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டதுடன், முதியவர்களான கணவன் மனைவி இருவரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக பொலாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அரங்கேறிய கொடூரம்: வெளிநாட்டு பிரஜையின் வீட்டுக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்! | Gang Attacked Foreign National In Kilinochchi

இதேவேளை, அந்த குழுவினர் சிசிரிவி கமராக்கள், மின்விளக்குகள், பிரதான வாயில் என்பவற்றை தாக்கி அழித்ததுடன், மோட்டார் சைக்கிளையும் சேதமாக்கி பின் அதனை எடுத்து சென்றுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

குறித்த குழுவினர் பெறுமதியான பொருட்களை சேதமாக்கியதுடன் சிலவற்றை அபகரித்தும் சென்றுள்ளனர். மேலும் குறித்த வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ஐந்து பேர் வைத்தியசாலையில்

சம்பவத்தில் 4 பேர் வைத்தியசாலையில் வெட்டுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வெளிநாட்டு பிரஜை கடந்த சில நாட்களிற்கு முன்னர் பெல்ஜியம் நாட்டிலிருந்து தனது வீட்டுக்கு விடுமுறையை கழிப்பதற்காக வருகை தந்துள்ளார்.

அவரது மனைவியின் தாய், தந்தை, சகோதரன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரே சிகிச்சை பெற்று வருவதுடன், வெளிநாட்டு பிரஜைக்கும், அவரது மனைவிக்கும் தாக்குதல் மேற்கொண்டமையால் சிறு உபாதைக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான செய்திகள்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?