முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 195 காலம் கடந்த ஞாபகம் இவர் நினைத்து இருந்தால் முள்ளிவாய்க்காலை தடுத்துயிருங்க முடியும்?

 

விடுதலைப் புலிகள் தொடர்பில் முதல்முறை மனம் திறந்து பேசிய முத்தையா முரளிதரன்!

விடுதலைப் புலிகள் தொடர்பில் முதல்முறை மனம் திறந்து பேசிய முத்தையா முரளிதரன்! | People Were Not Harmed By Ltte Cricketer Muttiah
 By Shankar 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தமிழீழ விடுதலைப் புலிகளால் விளையாட்டுத்துறைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.


தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

தமிழீழ விடுதலைப் புலிகள் துடுப்பாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு ஒருபோதும் தடைவிதிக்கவில்லை என்பதுடன் விளையாட்டுத்துறைசார் செயற்பாடுகளுக்கு அவர்கள் எந்தவிதமான பாதிப்புக்களையும் செய்யவில்லை.

விடுதலைப் புலிகள் தொடர்பில் முதல்முறை மனம் திறந்து பேசிய முத்தையா முரளிதரன்! | People Were Not Harmed By Ltte Cricketer Muttiah

அவர்களின் குறிக்கோள் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல்துறை என்பனவே. இந்த நிலையில் அவர்கள் சாதாரண மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் யார் அரசியல்வாதிகள் யார் சாதாரண மக்கள் என்று அறியாது பாதிக்கப்படும் நிலை தான் 30 ஆண்டுகளாக இலங்கையில் காணப்பட்டது எனவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் முதல்முறை மனம் திறந்து பேசிய முத்தையா முரளிதரன்! | People Were Not Harmed By Ltte Cricketer Muttiah

இதன்போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நீங்கள் சந்தித்திருக்கின்றீர்களா என முரளிதரனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 3 சந்தர்ப்பங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை சந்தித்திருந்தேன்.

அதாவது கடந்த 2002ம் ஆண்டு ஐ.நாவின் உணவு தூதராக இலங்கையில் பணியாற்ற எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

குறித்த சந்தர்ப்பத்தில் நான் அனைத்து பகுதிகளுக்கும் விஜயம் செய்து ஐ.நாவால் இலவசமாக வழங்கப்படும் உணவுப்பொருட்கள் ஒழுங்கான முறையில் பகிர்ந்தளிக்கப்படுகின்றதா? மக்களுக்கு ஒழுங்கான முறையில் கொண்டுசேர்க்கப்படுகிறதா என கண்காணித்தேன்.

இதன்போது, விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்கும் சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்தேன். அதன்போது விடுதலைப் புலிகள் எனக்கு மதிய உணவை வழங்கினார்கள்.

அந்த நேரத்தில் பேசியதே 800 எனும் திரைப்படத்தில் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தனியார் நிறுவனமொன்றினால் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்காக புலிகளின் இடங்களுக்கு சென்று கிரிக்கெட்டும் விளையாடியுள்ளேன்.

அதேவேளை, சுனாமி அனர்த்தத்தின் போதும் புலிகளின் பகுதிக்கு சென்று அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து மக்களுக்கு தேவையான உணவு வழங்கல் செயற்பாட்டையும் முன்னெடுத்ததுடன் மக்களுடன் நேரடியாக கதைத்து பாதிப்புக்கள் தொடர்பிலும் கேட்டறிந்தேன் எனவும் முத்தையா முரளிதரன் பதிலளித்தார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?