முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 210 மாணவர் ஒன்றியம் கண்டனம்

 

திலீபனின் நினைவூர்திப் பவனி மீதான தாக்குதல் : வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

திலீபனின் நினைவூர்திப் பவனி மீதான தாக்குதல் : வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் | Attack On Vehicle Trinco Thileepan 36Th Memorial
 By Vanan 3 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டணம் தெரிவித்துள்ளது.

மீள இனப்பிரச்சினையை ஏற்படுத்தி இன்னமும் சிங்களவர்களினுடைய தமிழர்கள் மீதான வன்மத்தை எடுத்துக்காட்டுகின்றது என வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஊடக பேச்சாளர் இ.தர்ஷன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றிரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஊடக பேச்சாளர் இ.தர்ஷன் கண்டணம் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய கடந்த காலங்களை அடுத்த சந்ததிக்கு எடுத்துக் கூறுகின்ற செயல் இன்று ஈழ தேசத்தில் நிகழ்ந்திருக்கின்றது.

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

குறிப்பாக தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினைவேந்தல் காலப்பகுதியிலே நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட்டோர் நினைவேந்தலை அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாக இன்றைய தினம் திருகோணமலை கப்பல்துறை வழியினூடாக பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில் பெண்கள் உட்பட இராணுவப் புலனாய்வாளர்கள் ஊர்தியினை தாக்கியுள்ளார்கள்.

தாக்கியது மட்டுமில்லாமல் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

இன நல்லிணக்கம் தொடர்பாக பேசிக்கொள்கின்ற அரசாங்கம் உண்மையிலேயே நீதி நியாயத்துடன் இராணுவம் பொலிஸ் தரப்புகள் செயற்பட வேண்டும்.

இன்று இடம்பெற்ற செயற்பாடுகள் அனைத்தையும் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றுள்ளது.

 திட்டமிட்ட செயற்பாடுகள்

தற்போதும் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

சிறிலங்காவில் தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் அபாயம்

சிறிலங்காவில் தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் அபாயம்

திலீபனின் நினைவூர்திப் பவனி மீதான தாக்குதல் : வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம் | Attack On Vehicle Trinco Thileepan 36Th Memorial

தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபம் திலீபன் அண்ணாவினது நினைவேந்தலில் அவரது கோரிக்கையை முன்வைத்து அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்கின்ற தருணத்தில் இவ்வாறான செயற்பாடு நிகழ்ந்திருக்கின்றமை மீள இனப்பிரச்சினையை ஏற்படுத்தி இன்னமும் சிங்களவர்களினுடைய தமிழர்கள் மீதான வன்மத்தை எடுத்துக்காட்டுகின்றது.

இதனை வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டிக்கிறது - என்றார். இதன் போது வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் சி.ஜெல்சின், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் யோ.நெவில்குமார் உள்ளிட்டவர்களும் உடனிருந்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?