யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை : வோல்கர் டர்க்
![யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை : வோல்கர் டர்க் | Accountability Key To Sri Lanka Future Un யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை : வோல்கர் டர்க் | Accountability Key To Sri Lanka Future Un](https://cdn.ibcstack.com/article/2ba47798-209f-4802-89fb-897f4a206182/23-64f938a9330ee.webp)
யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும், அதனூடாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் தீர்வு கிடைக்கவில்லை, மாறாக அவர்கள் வேதனைகளை அனுபவித்து வருகின்றனர் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) தெரிவித்துள்ளார்.
ஆணையாளர் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்புக்கூறல்களை நிறைவேற்றுவதிலிருந்து இலங்கை தொடர்ந்தும் தவறி வருவதாகவும், போர்க்குற்றங்கள், அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றின் மூலம் பொறுப்பு கூறல்கள் மீறப்பட்டுள்ளமை நன்கு புலப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு முன்னோக்கிச் செல்வதற்கு இந்த விடயங்கள் பாரிய தடையாக இருப்பதாகவும் அது தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டுமென மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 21 தாக்குதல்
மேற்படி விடயம் தொடர்பில் அவ்வறிக்கையில்,
“எந்தவொரு நிலைமாறுகால நீதிச் செயல்முறையும் வெற்றியடைவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான உண்மையான முயற்சிகளால் அடித்தளம் அமைக்கப்பட வேண்டும்.
இந்த பொறிமுறையின் ஊடாக உண்மையைத் தேடுவது மட்டுமன்றி பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்பு மற்றும் தொலைநோக்கு மாற்றத்தை செயல்படுத்துவதற்கான அரசியல் விருப்பத்துடன் இருக்க வேண்டும்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்