முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 183 உயிரிழந்த இளம் பெண்! . (மதம் ஒரு தடையாருந்ததா?)

 

வெளிநாடு செல்லவிருந்த நிலையில் இலங்கையில் உயிரிழந்த இளம் பெண்! அதிர்ச்சி பின்னணி

வெளிநாடு செல்லவிருந்த நிலையில் இலங்கையில் உயிரிழந்த இளம் பெண்! அதிர்ச்சி பின்னணி | Young Woman Died Sri Lanka Was Her Way To Britain
 By Shankar 2 நிமிடங்கள் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

இலங்கையிலிருந்து வெளிநாடுக்கு செல்ல தயாராக இருந்த 27 வயதுடைய இளம் பெண் ஒருவர், கல்கிஸ்ஸையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பிரித்தானிய குடியுரிமை பெற்ற குறித்த பெண், தனது 29 வயது காதலனுடன் சுமார் ஆறு மாதங்களாக அங்கு தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


மாடியில் இருந்து கீழே விபத்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் (09) அதிகாலை 2.40 மணியளவில் கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், வெள்ளவத்தையில் வசிக்கும் 29 வயதுடைய சட்டக்கல்லூரி மாணவனான தனது காதலனை சந்திப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி குறித்த பெண் இலங்கைக்கு வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடு செல்லவிருந்த நிலையில் இலங்கையில் உயிரிழந்த இளம் பெண்! அதிர்ச்சி பின்னணி | Young Woman Died Sri Lanka Was Her Way To Britain

பின்னர் இருவரும் கல்கிஸ்ஸையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்ததுடன், குறித்த இளைஞனும் கடந்த வருடம் சுவிஸ்சர்லாந்தில் கல்வி பயின்று நாட்டிற்கு வந்துள்ளார்.

முகநூல் மூலம் இருவரும் காதல் உறவை வளர்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், குறித்த பெண் நாளை அதிகாலை மீண்டும் பிரித்தானியாவிற்கு செல்லவிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெளிநாடு செல்லவிருந்த நிலையில் இலங்கையில் உயிரிழந்த இளம் பெண்! அதிர்ச்சி பின்னணி | Young Woman Died Sri Lanka Was Her Way To Britain

காதலனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில்,

நேற்றிரவு இருவருக்கும் இடையே மதம் தொடர்பாக சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

மேலும் நேற்றிரவு சுமார் 6 பியர் கேன்களை குறித்த இளைஞர் அருந்தியுள்ள நிலையில், இரவு உறங்கச் சென்ற போது காதலியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்லவிருந்த நிலையில் இலங்கையில் உயிரிழந்த இளம் பெண்! அதிர்ச்சி பின்னணி | Young Woman Died Sri Lanka Was Her Way To Britain

பின்னர் காதலியை தேடிய போதே சடலத்தை கண்டதாக பொலிஸாரிடம் இளைஞர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் சம்பவம் இடம்பெற்ற இடத்தை கல்கிஸ்ஸை பதில் நீதவான் ரத்ன கமகே பார்வையிட்டார்.

நாளைய தினம் (10-09-2023) இடம்பெறவுள்ள பிரேத பரிசோதனையின் பின்னர் இது கொலையா? தற்கொலையா? என்பது தெரியவரும் எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?