e 203 என்றோ ஒருநாள் உன் தியாகம் பலிக்கும் தமிழீழம் மலரும் திலீபன் அவர்களின் 36 ஆண்டு நினைவாக ஆர்.ஜெ, கலா அவர்களால் எழுதப்பட்ட கவிதை,
உன் உயிர்த் தீபம் எமக்காய்
எங்கள் இதயமும் எரிந்து கொண்டிருந்தது.....
ஊணையே உருக்கி ஒளியூட்ட நினைத்தாய்.
விடிகின்ற பொழுதுகளில் விடை கொடுத்தது உன் உயிர்த்தேகம்.
உன் கரங்களைப் பற்றிவிட நினைத்தோம்.
நீயோ! கண்மூடி விடை கொடுத்தாய்.
பிரபஞ்சம் உன் பிறப்பின் அதிசயத்தை அறிவிக்கத் தயாராகிக் கொண்டிருந்தது..
தவிப்போடு தடுத்திடலாம் எனும் நம்பிக்கை எமக்குள் நிலை கொண்டிருந்தது.....
உன் அடி நாக்கு வறண்ட போதும் அசரவில்லை அண்ணா நீ....!
நிமிடத்தில் போன சீவன் அல்ல நீ...!
நிறுத்தி, நிறுத்தி உனை வருத்தி வருத்தி உருகிப் போன சீவன்.
தண்ணீரைத் தவிர்த்த போது கண்ணீரைக் கடலாக்கினோம்.
விண்ணுடைந்து நீர் உனைச் சேராதா என விழி மேவினோம்.
கண்ணீரும் காய்ந்து போக கந்தன் முன் எம் அண்ணனும் சாய்ந்து கொண்டிருந்தான் சத்தமில்லாமல்...
வரலாற்று எச்சங்களை விதைத்த படி அவன் வற்றிய உடலிலிருந்து ஆவி ஆகாயம் நோக்கிப் பயணித்தது..
..
ஆம் ஆகாயம் நோக்கிப் பயணித்தது...
கண்ணீர் கோர்க்கும் எழுத்துக்களை
காணிக்கை ஆக்குகிறேன்.
வன்னியூர் ஆர்.ஜெ. கலா
கருத்துகள்