முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 203 என்றோ ஒருநாள் உன் தியாகம் பலிக்கும் தமிழீழம் மலரும் திலீபன் அவர்களின் 36 ஆண்டு நினைவாக ஆர்.ஜெ, கலா அவர்களால் எழுதப்பட்ட கவிதை,


உன் உயிர்த் தீபம் எமக்காய்
எரிந்த போது....

எங்கள் இதயமும் எரிந்து கொண்டிருந்தது.....
ஊணையே உருக்கி ஒளியூட்ட நினைத்தாய்.
விடிகின்ற பொழுதுகளில் விடை கொடுத்தது உன் உயிர்த்தேகம்.

உன் கரங்களைப் பற்றிவிட நினைத்தோம்.
நீயோ! கண்மூடி விடை கொடுத்தாய்.
பிரபஞ்சம் உன் பிறப்பின் அதிசயத்தை அறிவிக்கத் தயாராகிக் கொண்டிருந்தது..

தவிப்போடு தடுத்திடலாம் எனும் நம்பிக்கை எமக்குள் நிலை கொண்டிருந்தது.....
உன் அடி நாக்கு வறண்ட போதும் அசரவில்லை அண்ணா நீ....!
நிமிடத்தில் போன சீவன் அல்ல நீ...!
நிறுத்தி, நிறுத்தி உனை வருத்தி வருத்தி உருகிப் போன சீவன்.

தண்ணீரைத் தவிர்த்த போது கண்ணீரைக் கடலாக்கினோம்.
விண்ணுடைந்து நீர் உனைச் சேராதா என விழி மேவினோம்.
கண்ணீரும் காய்ந்து போக கந்தன் முன் எம் அண்ணனும் சாய்ந்து கொண்டிருந்தான் சத்தமில்லாமல்...
வரலாற்று எச்சங்களை விதைத்த படி அவன் வற்றிய உடலிலிருந்து ஆவி ஆகாயம் நோக்கிப் பயணித்தது..
..
ஆம் ஆகாயம் நோக்கிப் பயணித்தது...

கண்ணீர் கோர்க்கும் எழுத்துக்களை
காணிக்கை ஆக்குகிறேன்.

வன்னியூர் ஆர்.ஜெ. கலா


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?