முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 215 தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் (ஊடகப்பேச்சாளர்) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலை : கூட்டமைப்பு மீது விசனம்

 By Vanan 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் (ஊடகப்பேச்சாளர்) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் இன விடுதலைக்காகவும் உரிமைகளுக்காகவும் அஹிம்சை வழியில் போராடி, தனது இன்னுயிரை ஈகம் செய்த தியாக தீபம் தீலிபனின் நினைவூர்தி மீதான தாக்குதலை கண்டிப்பதற்கு எம்.ஏ.சுமந்திரன் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காடையர்களின் கொடும்தாக்குதல்

திலீபனின் நினைவூர்தியை விடாது துரத்தும் புலனாய்வாளர்கள்(படங்கள்)

திலீபனின் நினைவூர்தியை விடாது துரத்தும் புலனாய்வாளர்கள்(படங்கள்)

தியாக தீபம் தீலிபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட நினைவூர்தியையும் அதில் இருந்த திலீபனின் திருவுருவ படத்தையும் சிங்கள காடையர்கள் அடித்து சேதப்படுத்திய சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ் தேசியப் பரப்பிலுள்ள பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருவதுடன், திலீபனின் தியாகத்தையும் தமிழ் மக்களின் நினைவுகூருவதற்கான உரிமை மறுக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி, தமது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

எனினும் நேற்றைய சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், காவல்துறையினர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது வெட்கக்கேடான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜெனிவாவில் நீதிகோரிய புலம்பெயர் தமிழர்கள் : திலீபனின் நினைவூர்தி மீதான தாக்குதலுக்கும் எதிர்வினை

ஜெனிவாவில் நீதிகோரிய புலம்பெயர் தமிழர்கள் : திலீபனின் நினைவூர்தி மீதான தாக்குதலுக்கும் எதிர்வினை

விசனத்தை ஏற்படுத்திய பதிவு

தாக்குதல்தாரிகளை இலகுவாக அடையாளம் காண முடியும் என கூறியுள்ள எம்.ஏ.சுமந்திரன், இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலை : கூட்டமைப்பு மீது விசனம் | Ltte S Against The Struggle Tna Mp

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக வாய்ச் சொல்லில் கூறுவதை விடுத்து செயலில் அதனை காண்பிக்குமாறும் காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் ரிரான் அலஸ், அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

எனினும் தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் சேதமாக்கப்பட்டமை மற்றும் நினைவுகூருவதற்கான உரிமை மறுக்கப்படுகின்றமை தொடர்பாக அந்தப்பதிவில் எந்தவொரு கருத்தையும் எம்.ஏ.சுமந்திரன் வெளியிடாமை தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகளின் ஆயுத வழிப் போராட்டத்தை வெளிப்படையாக விமர்சித்திருந்த எம்.ஏ.சுமந்திரன், தமிழீழ விடுதலை புலிகளின் அஹிம்சை வழிப் போராட்டத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லாத தனது மனோ பாவத்தை தனது எக்ஸ் பதிவின் ஊடாக வெளியிட்டுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபனின் ஊர்திபவனி மீது தாக்குதல் : சிங்கள மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பு குரல்

தியாக தீபம் திலீபனின் ஊர்திபவனி மீது தாக்குதல் : சிங்கள மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பு குரல்

நிலைமாறு கால நீதியின் கீழ் நினைவுகூருவதற்கான உரிமையை வலியுறுத்த தவறியுள்ள எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்களின் ஏனைய உரிமை மற்றும் நீதி சார்ந்த விடயங்களில் நேர்மையுடன் செயற்படுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசிய பரப்பிலுள்ளவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?