e 237 திலீபன் உண்ணாவிரதம் இருக்காமல் விட்டு இருந்தால் விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்திற்கு எதிராக போராடியிருப்பார்களா? இலங்கை சிங்களவர்களின்கையில் இருந்து இருக்குமா?
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்தலாம்!
மிரட்டல் | Dileepan Memorial Events Sarathweerasekara Warning
கடும் தொனியில் சரத்வீரசேகர மிரட்டல்திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்தலாம்! கடும் தொனியில் சரத்வீரசேகர
நினைவேந்தல் திலீபன் எந்த நாட்டுப் படைகளிற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தான் எந்த நாட்டிடம் நீதி கேட்டான், அக்காலப்பகுதியில் வடகிழக்கு எந்த நாட்டுப் படைகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை சிங்கள முட்டாள்கள் புரிந்து கொள்ளவேண்டும்,
திலீபன் உண்ணாவிரதம் இருக்காமல் விட்டுயிருந்தால் விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்தோடு போர் இட்டு 1200 இந்திய வீரர்களை சுட்டுத் தள்ளியிருக்கமாட்டார்கள், அப்படி ஒரு போர் அவர்கள் செய்யாமல் விட்டுயிருந்தால் இந்திய இராணுவம் எந்தக் காலத்திலும் இலங்கையில் தமிழீழப் பகுதியான வடகிழக்கில் இருந்து வெளியேறியிருக்கமாட்டார்கள்,
அங்கே இருந்துகொண்டு இந்தியாவின் இறைமையைப்பாதுகார்த்துக்கொண்டுயிருந்து இருப்பார்கள், அப்படியிருந்து இருந்தால் சிங்களவர்களின் கையில் அந்த நாடுயிருந்து இருக்குமா,? என்பதை சிங்கள முட்டாள்கள் புரிந்துகொள்ள வேண்டும்
திலீபனின் உண்ணாவிரத்தால் தான் ஒரு பிற நாட்டின் ஆதிக்கத்தில் இருந்து இலங்கை தப்பிக் கொண்டது, திலீபனின் உண்ணாவிரததின் பலன் தமிழர்களை விட சிங்களவர்களிற்க கூடுதலான லாபம் கிடைத்துள்ளது, உலக நாடுகள் அனைத்தையம் இணைத்து அவர்களிடம் இருந்து நவின போர்விமானங்களை வைத்து விடுதலைப் புலிகளை அழித்தாய்,
ஆனால்இந்திய இங்கையைப்பிடித்து இருந்தால் எந்த நாடு இந்தியவை அழிக்க முன்வரும் என்பதை அனைத்து சிங்கள வெறியர்களும் சிந்தித்துப்பார்க்கவேண்டும், இந்திய இராணுவத்தோடு சண்டையிட திராணி அற்ற நீங்கள் இரகசியமாக விடுதலைப் புலிகளிற்கு ஆயுதங்களைக்கொடுத்து இந்திய இராணுவத்தை அடித்து வெளியேற்றுங்கள் ஒரு தாய் பிள்ளைகளாக வாழுவோம் என்று விடுதலைப் புலிகளின் காலில் விழுந்த காலங்களை நினைத்துப் பாருங்கள்.
நிகழ்வுகள் நாட்டில் மீண்டும் இனமோதலுக்கு வழி வகுத்து இரத்தக்களரியை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கடற்படை தளபதியுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவேந்தும் இப்படியான நிகழ்வுகளை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
வடக்கில் திலீபனை நினைவேந்தும் நிகழ்வுகளுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி மாவட்ட நீதி மன்றங்களில் பொலிஸார் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி
எனினும் வடக்கில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து திலீபன் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளன. வடக்கு நீதிமன்றங்கள் இப்படியான கட்டளைகளைத்தான் வழங்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
எனினும் பொலிஸார் தமது கடமைகளை உரிய வகையில் செய்து வருகின்றனர். வடக்கிலும்,கிழக்கிலும் பொலிஸாருக்குச் சவால் விடும் வகையில் தமிழ் அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். அவர்களைத் திருத்தவே முடியாது.
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் மீண்டும் இன மோதலுக்கு வழிவகுத்து இரத்தக்களரியை ஏற்ப டுத்தும் என்பதைத் தமிழ் அரசியல்வாதிகளிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை நினைவேந்தும் இப்படியான நிகழ்வுகளை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும். எனவே இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும் , நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் சுயாதீன விசாரணைகளை நடத்தி அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும் தேவையேற்படின் சர்வதேச விசாரணையை நாட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
- இணைப்பைப் பெறுக
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கருத்துகள்